முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கோட்டை அருகே பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 10 ஆண்டு சிறை தென்காசி கோர்ட் தீர்ப்பு

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      திருநெல்வேலி

செங்கோட்டை அருகே வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற கொள்ளையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நகை பறிப்பு

 நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கட்டளைக்குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஸ்ரீமதி. கடந்த 4.2.2013 அன்று முருகன் வெளியூர் சென்றிருந்தார். அதனால் வீட்டில் ஸ்ரீமதி தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் இருந்துள்ளார். அன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அன்று நள்ளிரவு நேரத்தில் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த ராஜப்பா மகன் முருகேசன் (வயது 49) என்பவர் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்றார். இதனால் திடுக்கிட்ட விழித்த ஸ்ரீமதி, அவரது மாமியார் மற்றும் குழந்தையை முருகேசன் கத்தியைக் காட்டி மிரட்டி ஸ்ரீமதி அணிந்திருந்த தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.ச்சம்பவம் குறித்து புளியரை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்து அவரிடமிருந்த தங்க செயினை மீட்டனர். இவ்வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் உதவி செ~ன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி திருவேங்கட சீனிவாசன் வழக்கினை விசாரணை செய்து முருகேசனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,500 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமச்சந்திரன் ஆஜரானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து