எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி, அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியில் தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் செந்தில் பப்ளிக் பள்ளியின் பசுமைமன்றம் இணைந்து நடத்தும் மல்பெரி மரக்கன்றுகள் மற்றும் விதைப்பந்துகள் வழங்கும் விழா கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது.
மரக்கன்றுகள்
தருமபுரி, அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியில் தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் செந்தில் பப்ளிக் பள்ளியின் பசுமைமன்றம் இணைந்து நடத்தும் மல்பெரி மரக்கன்றுகள் மற்றும் விதைப்பந்துகள் வழங்கும் விழா கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். செந்தில் குழுமத்தின் தலைவர் செந்தில் சி கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, தாளாளர் தீப்தி தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் 3587 மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களுக்கு மல்பெரி மரக்கன்றுகள் மற்றும் விதைப்பந்துகளை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்.
பின்னர் இவ்விழாவில் கலெக்டர் கே.விவேகானந்தன், பேசியதாவது:தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை நடவடிக்கைகளால் பள்ளிகளில் மாணவர்கள் மரம் நடும் விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல பகுதிகளில் தொடர்ந்து பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வனப் பரப்பளவு 33 சதவீதமாக உள்ளது. ஆனால் தருமபுரி மாவட்டத்தில் வனப்பரப்பு அதிகரிக்கப்பட்டு 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த சதவீதத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. விதைப்பந்து வனப்பகுதிகளில் எறியும்போது அதில் உள்ள விதைகள் செடிகளாக மாறி, மரங்களாக வளரும்போது மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். நாம் அதிகமாக பெட்ரோல், டீசல் பயன்படுத்தி வருகிறோம். இதற்கு இணையாக பசுமை பரப்பளவை நாம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் அதிக அளவு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இந்த மரகன்றுகள் வளர்க்கும் திட்டத்தில் வேர் வலுவாக்கும் (சுழழவ ணுழநெ Pடயவெயவழைn) என்ற புதுமையான முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மல்பெரி செடிகள் பட்டுவளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை மூலம் நடப்பட்டு வருகிறது. சாதாரணமாக நடப்படும் செடிகளை விட இந்த புதுமையான முறை மூலம் நடப்படும் செடிகள் மூன்று மடங்கு நல்ல விளைச்சல் கொடுக்கிறது.
பட்டுப்புழு வளர்ப்பு
மல்பெரி சாகுபடி மேற்கொள்ள ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் கொள்முதல் செய்து புழு வளர்ப்பு மேற்கொள்ள ரூ.40 ஆயிரம் போதுமானதாகும். மல்பெரி தோட்டங்களில் சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானிய வசதியுடன் 5 ஏக்கர் வரை சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது. பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை 1500 சதுர அடிக்கு கூடுதலாக கட்டும் விவசாயிகளுக்கு ரூ.82 ஆயிரத்து 500 மானியமாக வழங்கப்படுகிறது. பொதுமக்களின் குறைகள் மற்றும் தகவல்கள் அறியும் வகையில் அரசு சேவை என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் கே.விவேகானந்தன், பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் காளிதாசன், நிர்வாக அலுவலர் ஜெ.கார்த்திகேயன், முதன்மை முதல்வர் சி.ஸ்ரீனிவாசன், முதல்வர்கள் பி.செந்தில் முருகன், எம்.செல்வம், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.