எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரும்பு பயிர் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்துள்ளது. விவசாயிகளுக்கு லாபகரமானதும், அதிக பிரச்சினை இல்லாததுமான பயிராக கரும்பு விளங்குகிறது. கரும்பின் முக்கிய விளை பொருளான சக்கரை உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. சர்க்கரை நுகர்வில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 2.5 கோடி டன்கள் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் சராசரி கரும்பு மகசூல் ஏக்கருக்கு 28 டன்களாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த 2015-16ல் - 41 டன்களாக இருந்தது. இந்திய அளவில் தமிழகம் மகசூல் திறனில் முதலிடம் வகிக்கிறது. ஆனால் பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளின் சராசரி மகசூல் 50 டன்களாக உள்ளது.
எனவே, அத்தியாவசிய உணவுப் பொருளாக சர்க்கரை இருப்பதால் தொடர்ந்து சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்கவும், தேவையை ஈடுகட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரும்பு உற்பத்தி திறனில் முந்தைய ஆண்டுகளில் தமிழகம் உலகிலேயே முதலிடம் வகித்தாலும், கடந்த பல ஆண்டுகளாக உற்பத்தி திறனில் எக்டருக்கு போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. கரும்பின் அதிகபட்ச உற்பத்தித் திறன் ஏக்கருக்கு 132 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சராசரி மகசூல் திறனை மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரும்பில் புதிய இரகங்கள் அறிமுகம், அதிக இடைவெளியில் நடவு, சொட்டு நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் நவீன உத்தியாக அறிமுகம் செய்யப்பட்டதுதான் செம்மைகரும்பு சாகுபடி எனப்படும் ஒரு விதைப் பருசீவல் நாற்று முறையாகும். இது நீடித்த நவீன கரும்பு சாகுபடி என்றும் கூறப்படுகிறது.
நீடித்த நவீன கரும்பு சாகுபடி (ளுளுஐ) ஃ கரும்பு நாற்று நடவு முறை
வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் இருபருக்கரும்பு கரணைகளை நடுகிறார்கள். இதிலிருந்து 60 ஆயிரம் கரும்பு பயிர்கள் தோன்றி, ஒரு கணுவுக்கு 2 கரும்புகள் விளைந்து அதில் ஒரு கரும்பு ஒரு கிலோ எடை எனக் கணக்கிட்டால் ஏக்கருக்கு 120 டன் கரும்பு மகசூல் கிடைக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இதில் 3-ல் ஒரு பங்கு மகசூல் தான் கிடைக்கிறது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், போதிய பயிர் எண்ணிக்கை இல்லாததுதான் முக்கிய குறைபாடாகக் கருதப்படுகிறது. இந்த நவீன கரும்பு நாற்று முறை மூலம் இந்த குறைபாடு தவிர்க்கப்படுகிறது.
இம்முறையின் மூலம் விதை நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெறலாம்.
கடந்த 6 ஆண்டுகளாக கரும்பு நாற்றங்கால் அமைத்து ஈரோடு மாவட்டம் மட்டுமன்றி மேட்டூர், கொளத்தூர் போன்ற இடங்களுக்கு லட்சக் கணக்கில் கரும்பு நாற்று விநியோகம் செய்து வரும் கோபி வட்டாரம் பா.வெள்ளாளபாளையம் - குளவிக்கரடு பகுதியைச் சேர்ந்த வெங்கிடுசாமி என்ற முன்னோடி விவசாயி இது குறித்துத் தெரிவித்ததாவது
நான் பல ஆண்டுகளாக கரும்பு கரணையிலிருந்து நாற்றுகளை உற்பத்தி செய்யும் நாற்றங்காலை அமைத்து, கரும்பு நாற்றுக்களை விவசாயிகளுக்கு விநியோகித்து வருகிறேன். ஒரு ஆண்டுக்கு 60 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் நாற்றுக்களை உற்பத்தி செய்கிறேன். நிழல் வலைக் கூடம் அமைத்து நன்கு பயிற்சி பெற்றவர்களைக் கொண்டுதான் இந்த நாற்றுக்களை உற்பத்தி செய்ய முடியும். ஒரு நாற்றுக்கு 1.60 ரூபாய் வசூலிக்கிறேன். இது தவிர போக்குவரத்து செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். கரணையாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் எண்ணிக்கை வேண்டும். ஆனால் இந்த முறையில் 5 முதல் 6 ஆயிரம் நாற்றுகள் போதுமானது. பார்களில் 5 அடி இடைவெளி தேவை.
இந்த முறையில் கரும்பு கரணையில் உள்ள பருக்கள் வெட்டுக் கருவி மூலம் அப்படியே சீவி எடுக்கப்பட்டு, தேங்காய் நார்க்கழிவுகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் டிரேக்களில் ஊன்றப்பட்டு, பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது. 25 முதல் 30 நாட்கள் ஆனதும் 4 முதல் 6 இலைகள் வளர்ந்திருக்கும். சாதாரணமுறையில் 2 மாதங்களில் கிடைக்கும் வளர்ச்சி - இந்த முறையில் ஒரே மாதத்தில் கிடைத்துவிடுகிறது. இந்த நிலையில் நன்கு வளர்ந்துள்ள பயிர்களை எடுத்து நடவு செய்து விடலாம். இதன் மூலம் குறைந்த நாட்களில் அதிக அளவு முளைப்புதிறன் கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 100 டன்கள் வரை மகசூல் எடுக்க வாய்ப்புள்ளது” - என்று கூறினார்.
இந்தப் புதிய முறை நாற்று உற்பத்தி குறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்ததாவது, ‘ ஒரு பரு கரும்பு சீவல்களிலிருந்து நாற்றங்கால் அமைத்து, நாற்றுக்களைப் பாதுகாப்பாக வளர்த்து, நடவு செய்யும் இம்முறை கரும்பு உற்பத்தியில் பெரும் புரட்சியை உருவாக்கியுள்ளது. சாதாரண முறையில் ஒரு ஏக்கருக்கு 60 ஆயிரம் விதைப் பருக்கள் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக இந்தப்புதிய முறையில் 5 ஆயிரம் நாற்றுகள் மட்டுமே நடவு செய்யப்படுகிறது. அதிக இடைவெளியில் நடப்படுவதால் காற்றும், சூரிய ஒளியும் பயிர்களுக்கு இடையில் நன்கு ஊடுருவுகிறது. ஒருபார் விட்டு ஒரு பார் நீர் பாய்ச்சுதல் மற்றும் சொட்டுநீர்ப்பாசனம் போன்ற உத்திகளை இதில் பயன்படுத்துவதால் 40 சதம் பாசன நீர் சேமிக்கப்படுகிறது. பார்களின் இடைவெளியில் ஊடுபயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், களைகளையும் கட்டுப்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு விதைக் கரணைகள் 4 டன்களுக்குப் பதிலாக, இந்தப் புதிய முறையில் விதை சீவல்களின் எடை வெறும் 50 கிலோ என்பதால் விதைக் கரணைகளுக்கான போக்குவரத்து செலவும் பிற நடைமுறைகளும் வெகுவாகக் குறைகிறது. ஒரு பயிரிலிருந்து 15 முதல் 20 கிளைப்புகள் தோன்றுவதால் மகசூல் இரட்டிப்பாக வாய்ப்பு ஏற்படுகிறது. நடப்பு மார்கழி தைப்பட்டத்திற்கு கோ 86032, கோ 99004, கோ 94008, கோகு 94077 ஆகிய இரகங்களை சாகுபடி செய்யலாம். இதில் கோ 86032 இரகம் சிறந்ததாக கருதப்படுகிறது. தமிழக மொத்த கரும்பு சாகுபடிப் பரப்பில் 79 சதம் பரப்பளவில் இந்த கோ 86032 இரகம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், ஒரு பரு சீவல் நாற்றுக்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிழல் வலைக் கூடங்கள் அமைக்கவும் பருவெட்டும் கருவி உள்ளிட்ட உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் 50 சத மானியமாக 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு பரு கரும்பு நாற்றுகள் நடுவதற்கு ஏக்கருக்கு 4500 ரூபாய் மானியமும், இந்த வயல்களில் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் அமைப்பதற்கு சிறு விவசாயிகளுக்கு அதிக பட்சம் 2 லட்சம் ரூபாய் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து மேலும் விவரங்களை அறிய கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.” - என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க