முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெடுஞ்சாலை தார்சாலை பணிகள் அரக்கோணம் எம்எல்ஏ. சு.ரவி ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      வேலூர்
Image Unavailable

 

தார்சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு நடத்தி விரைவாக முடிக்க வேண்டமென நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கேட்டுக் கொண்டார். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் பலகோடி ரூபாய் மதீப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது. இதன் பணிகளும் இரவுபகல் பாராமல் வேகவேகமாக நிறைவேற்றப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது.

தார்சாலை அமைக்கும் பணி

இந்த நிலையில் நெடுஞ்சாலையில்; தார்சாலைகள் அமைக்க ரூபாய் 4கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி 80சதவிகித சாலைபணிகளும் நிறைவடைந்த வேளையில்அரக்கோணம் திருத்தணி மார்கத்தில் உள்ள நெடுஞ்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேரில் சென்று ஆய்வுசெய்த அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி நெடுஞ்சாலை துறை பொறியாளர் ஷெரீப்பிடம் சாலை பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். 2018 புத்தாண்டிற்குள் மக்கள் தங்குதடையின்றி சாலை பயன்படுத்திட மீதமுள்ள பணிகள் விரைவாக முடித்து தரும்படியும் கேட்டுக் கொண்டார். அப்போது அதிமுக கைனூர் ஊராட்சி செயலாளர் வாசு உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து