முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டிவீரன்பட்டியில் நா.சு.வி.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      திண்டுக்கல்

வத்தலக்குண்டு -பட்டிவீரன்பட்டியில் நா.சு.வி.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலமான இளைஞர் வளமான பாரதம் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் ஏழு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது
 திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள பட்டிவீரன்பட்டி நாடார்கள் சுந்தரவிசாலாட்சு வித்யசாலா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலமான இளைஞர் வளமான பாரதம் என்ற தலைப்பின்படி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தேவரப்பன்பட்டியில் உள்ள சின்னகவுண்டன்பட்டியில் நடைபெற்றது.  நா.சு.வி.வி பள்ளிகளின் மேலாண்மைக்குழு தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் அய்யனார்வெங்கடேஷ், எச்.என்.யு.பி. சங்கத்தின் உப தலைவர் காமராஜ் ஆகியோர் வரவேற்றனர். நா.சு.வி.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.ஜெயக்குமார், நாட்டு நலப்பணி திட்டம் குறித்து சிறப்புரையாற்றினார். ஏழு நாட்;கள் நடைபெற்ற முகாமிற்கு இப்பகுதியைச் சேர்ந்த அனைத்த மக்களும் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். அதனைத் தொடர்ந்து குழந்தை தொழிலாளர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. ரெட் ரிப்பன் கிளப் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காசநோய் மற்றும் சர்க்கரைநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு இணை இயக்குநர் ராமசந்திரன், ஹெல்த் அட்வைசர் பாலசுப்பிரமணி, ஒருங்கிணைப்பாளர் ஜான்ஜாய்ஸ்ராஜன், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். பட்டிவீரன்பட்டி பேரூராட்சி இணைந்து டெங்கு கொசு விழிப்புணர்வு நடைபெற்றது. பேரூராட்சி செயலாளர் பாலமுருகன்,  ஜே.ஆர்.சி மாவட்;ட பொருளாளர் பிச்சைக்கனி ஆகியோர் கலந்து கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து அரசு கால்நடை மருத்துவர் சங்கரவிநாயகம் தலைமையில் இலவச கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. ஏழு நாட்கள் நடைபெற்ற நாட்டு நலப்பணி சிறப்பு முகாமினை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்தி விழாவின் முடிவில் நா.சு.வி.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் எஸ்.மரகதவேல் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து