முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் எனது மேஜையில் தயார் நிலையில் உள்ளது: அமெரிக்கைவை மிரட்டும் வடகொரிய அதிபர்

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

பியாங்கியாங், வடகொரியா அணுஆயுத சோதனைகளை முடித்துவிட்டதாகவும், அதனை இயக்குவதற்கான ஸ்விட்ச் தனது மேஜையின் மீது தயார் நிலையில் இருப்பதாகவும் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் புத்தாண்டு கொண்டாட்ட உரையில் இதனை கிம் தெரிவித்தார்.

இதுகுறிப்பு கிம் பேசும்போது, "அணுஆயுத சோதனைகளை வடகொரியா முழுமையாக முடித்துவிட்டது. அணுஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் என்னுடைய மேஜையின் மீது தயார் நிலையில் உள்ளது.

வடகொரியாவின் சுதந்திரம், நீதியை எந்த நாட்டு சக்தியும் தடுத்துவிட முடியாது. நாட்டின் சுய பாதுகாப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் அணுசக்தி திட்டங்கள் மேம்படுத்தப்படும். வடகொரியா பொறுப்புள்ள ஒரு அணுஆயுத நாடாக தொடர்ந்து இருக்கும். - வடகொரிய அதிபர்

எனது நாட்டின் அணுசக்தி படைகள் அமெரிக்காவிடமிருந்து நாட்டைக் காக்கும் சக்தி வாய்ந்த பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தியுள்ளன.

வடகொரியாவின் அணுஆயுதங்கள் அமெரிக்காவின் முக்கிய இடங்களை தாக்கும் திறன் படைத்தவை." என்று கூறினார்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவே ஏவுகணை, அணுஆயுத சோதனை நடத்தப்பட்டது என்று வடகொரியா கூறி வருகிறது. மேலும், கடந்த மாதம் 29-ம் தேதி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும், அணு ஆயுத சோதனையையும் நடத்தியது. அதன்பின், ‘வடகொரியா அணுஆயுத நாடு’ என்று அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக அறிவித்தார்.
”வடகொரியாவின் சுதந்திரம், நீதியை எந்த நாட்டு சக்தியும் தடுத்துவிட முடியாது. நாட்டின் சுய பாதுகாப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் அணுசக்தி திட்டங்கள் மேம்படுத்தப்படும். வடகொரியா பொறுப்புள்ள ஒரு அணுஆயுத நாடாக தொடர்ந்து இருக்கும்.

வரும் 2018-ம் ஆண்டிலும் அணுஆயுத மேம்பாடு தொடரும். அந்தக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை” என்று கிம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து