முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசில் சிறையில் நடந்த மோதலில் 9 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

கோயால்: பிரேசிலின் கோயாஸ் மாகாணத்தில் உள்ள சிறையில் போட்டி கும்பல்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 9 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவில் நடைபெற்றது.

இதுகுறித்து வெளியான செய்தியில், ''கலோனியா வேளாண் சிறையில் இரண்டு கும்பல்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு புறத்தில் இருந்து, மற்றொரு புறத்துக்கு தீ வைக்கப்பட்டு, தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. தீயை அணைக்க தீயணைப்புத்துறை அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன. இதனால் உயிரிழந்தவர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின்போது 106 சிறைக்கைதிகள் தப்பிச் சென்றனர். அவர்களின் 29 பேர் பிடிபட்டுள்ளனர். இதுகுறித்து வெளியான மற்றொரு தாக்குதலின்படி, வன்முறையின்போது 127 பேர் வெளியேறிச் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தானாகவே சிறைக்குத் திரும்பினர்.

தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து