முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 69,070 குழந்தைகள் பிறந்தன யூனிசெப் நிறுவனம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

ஐ.நா. : புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில், இந்தியாவில் 69,070 புதிய குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யூனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"2018 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,86,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி இல்லாத நாடுகளில்தான் அதிகஅளவு குழந்தைகள் பிறந்துள்ளன. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விடவும், இந்தியாவில் அதிகமாக 69,070 குழந்தைகள் அன்றைய தினம் பிறந்துள்ளன.

சீனாவில் 44,760, நைஜீரியாவில் 20,210, பாகிஸ்தானில் 14,910, இந்தேனேஷியாவில் 13,370, அமெரிக்காவில் 11,280, காங்கோ நாட்டில் 9,400 எத்தியோபியாவில் 9,020, வங்கதேசத்தில் 8,370 குழந்தைகள் பிறந்துள்ளன. உலக நாடுகளில் பிறந்த மொத்த குழந்தைகளில் பாதி, இந்த 9 நாடுகளில் பிறந்துள்ளன. இவற்றில் பல குழந்தைகள் பிறந்த முதல் நாளிலேயே உயிரிழந்துள்ளன.

குழந்தைகளின் பிறப்பு ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் குழந்தைகளின் இறப்பு விகிதமும் கவலையளிக்கிறது. 2016-ம் ஆண்டு புள்ளி விவரப்படி, ஒரு நாளில், 2,600 குழந்தைகள் வீதம் இறந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து