முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து தி.மு.க.வினர் வெளியேறுவர் மா.சுப்ரமணியன் பேட்டி

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: ரஜினி கட்சி ஆரம்பித்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று தி.மு.கவின் தெற்கு மாவட்ட செயலாளரும், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

நடிகர் ரஜினி தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்ததை அடுத்து, அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். அதற்கு முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் இருக்கும் தனது ரசிகர்களை மன்றத்தின் மூலம் ஒருங்கிணைக்கும்படி ரஜினி கேட்டுக்கொண்டு உள்ளார். 

ரஜினியின் இந்த அறிவிப்பால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.  இந்நிலையில்  திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளரும், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் கூறுகையில், ரஜினி ரசிகர்கள் திமுகவில் இருக்கலாம். ஆனால், எங்களை பொறுத்தவரை கொள்கை

வேறு; சினிமா வேறு. என்பதை தொண்டர்கள் நன்கு அறிந்து உள்ளார்கள்.
ரஜினி தனிக்கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்து இருப்பதன் மூலம், எங்கள் தொண்டர்கள் ரஜினி ரசிகர் மன்றங்களில் இருந்து வெளியேறுவார்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து