எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேப்டவுன்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக வெற்றிப்பெற்று முத்திரை பதிக்கும் என்ற ஆவல் ரசிகர்கள் இடையே மேலோங்கியுள்ளது.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. இதனால் முதல் முறையாக தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது மிகவும் சவாலானது என்பதில் சந்தேகம் இல்லை.
9 டெஸ்ட் தொடரை ...
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது. இலங்கையை மட்டும் 3 தடவை (2-1, 3-0, 1-0) வென்றது. தென் ஆப்பிரிக்கா (3-0), வெஸ்ட்இண்டீஸ் (2-0), நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (3-0), வங்காள தேசம் (1-0), ஆஸ்திரேலியா (2-1) ஆகிய அணிகளுக்கு எதிராக வென்றது. இந்த 9 தொடர் இந்திய மண்ணில் 6, வெளிநாட்டில் 3-யை (இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்) கொண்டது.
ரன் குவிப்பு இருக்கும்
கடந்த 10 தொடரில் விளையாடிய இந்திய அணி தொடரை இழக்காமல் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் இந்த சாதனையை நீட்டித்துக் கொள்ள கடுமையாக போராட வேண்டும். தவான் உடல் தகுதி பெற்றதால் தொடக்க வீரரை தேர்வு செய்வதில் சவால் இருக்கலாம். ஆனால் முரளிவிஜய், லோகேஷ், ராகுல் ஆகியோர் தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. 3-வது வீரர் வரிசையில் புஜாரா, 4-வது வீரர் வரிசையில் கேப்டன் விராட்கோலி மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். முதல் 4 வீரர்களின் ஆட்டத்தை பொறுத்தே அணியின் ரன் குவிப்பு இருக்கும். தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.
ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு
ஆல்ரவுண்டரான ஹர்த்திக் பாண்ட்யா மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரது வருகையால் ரோகித் சர்மாவின் இடம் கேள்விக் குறியே. பாண்ட்யாவுடன் ரகானே, விர்த்திமான் சகா ஆகியோரின் மிடில் ஆர்டர் வரிசையில் இடம் பெறுவார்கள். ஜடேஜா உடல் தகுதியுடன் இல்லாததால் அஸ்வின் மட்டுமே சுழற்பந்தில் இடம் பெறுவார். 3 வேகப்பந்து வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கும். வேகப்பந்தில் புவனேஷ்குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா ஆகியோர் உள்ளனர். பாண்ட்யாவை வேகப்பந்து வீரராக கணக்கில் கொண்டால் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
பதிலடி கொடுக்கும் ...
தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்கும் இந்தியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆர்வத்துடன் தென் ஆப்பிரிக்கா உள்ளது. மேலும் 2016-ம் ஆண்டில் இந்திய மண்ணில் தோற்றதற்கும் பதிலடி கொடுக்கும் வேட்கையில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் இருக்கும் அந்த அணி சொந்த மண்ணில் அபாரமாக விளையாடக் கூடியது. பேட்டிங்கில் கேப்டன் டுபெலிசிஸ், டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா, எல்கர் ஆகியோரும் பந்து வீச்சில் பிலாண்டர், ரபடா, மார்னே மார்கல், கேசவ் மகாராஜ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஸ்டெயின் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவது கடினமே.
இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் டெலிவிஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்திய வீரர்கள் விவரம்
விராட்கோலி (கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரகானே, ஹர்த்திக் பாண்ட்யா, விர்த்திமான் சகா, அஸ்வின், புவனேஷ்குமார், உமேஷ் யாதவ், இஷாந்த்சர்மா, முகமது ஷமி, பும்ரா, தவான், ரோகித் சர்மா, ஜடேஜா, பார்த்திவ் பட்டேல்.
தென் ஆப்பிரிக்கா வீரர்கள்
டுபெலிசிஸ் (கேப்டன்), எல்கர், மார்கிராம், டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா, புவுமா, குயின்டன், டிகாக், பிலாண்டர், ரபடா, மார்னே மார்கல், கேசவ்மகராஜ், கிறிஸ்மோரிஸ், புருயின், ஸ்டெயின், பெலுகுவாயோ.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.