முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க உதவி நிறுத்தம்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

புது டெல்லி, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது புத்தாண்டு செய்தியில் தீவிரவாதிகளை அழிப்பதாக பாகிஸ்தான் பொய்கள் மற்றும் வஞ்சகத்தின் மூலம் அமெரிக்காவை ஏமாற்றி 15 ஆண்டுகளில் ரூ. இரண்டரை லட்சம் கோடி நிதியுதவி பெற்றுள்ளது என குற்றம் சாட்டினார்.

அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தியதற்கு இந்தியாவே காரணம் என பாக்ஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. டிரம்ப் கூறிய குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் இஸ்லாபாத்தில் நடந்தது. அதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா அலி கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியாவின் ஊதுகுழலாக அமெரிக்கா செயல்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் நட்புறவுடன் உள்ளது. இதனால் இந்தியாவின் பொய்கள் மற்றும் வஞ்சக கருத்துக்களை தற்போது அமெரிக்கா வெளிப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து