எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் அடங்காத காளைகளை அடக்கிப்பிடித்து சாதனை செய்து உயிர்நீத்த மாடுபிடி வீரரின் நினைவாக கோவில் கட்டியுள்ள அப்பகுதி மக்கள் அவரை தெய்வமாக வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
சுமார் 300ஆண்டுகளுக்கு முன்பாக மாமதுரை நகரின் மேற்கு தொலைவில் விவசாய செழிப்பு மிகுந்த இடத்திற்கு கருத்தமாயன் என்பவரின் குடும்பத்தினர் வந்து தங்கியுள்ளனர். இதை தொடர்ந்து கருத்தமாயனின் உறவினர்களும் அந்த செழிப்பு நிறைந்த பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதையடுத்து சில ஆண்டுகளில் அந்த நிலப்பகுதி மக்கள் அதிகமாக வசித்திடும் சொரிக்காம்பட்டி என்ற கிராமமாக மாறியிருக்கிறது. இந்த ஊரின் முத்தகுடியான கருத்தமாயனும் மக்களும் ஒன்றிணைந்து விவசாய பணிகளில் தீவிரம் காட்டியதுடன் கால்நடைகள் வளர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளனர். வயலில் உழைத்த களைப்பு நீங்கிடவும் விவசாய பெருமக்களுக்கு உற்சாகம் செய்திடவுமான விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாறியிருந்தது. அதன்படி இங்கு நடந்திட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுகளில் கருத்தமாயனின் நான்கு மகன்களில் கடைசி மகனான அழகத்தேவன் என்பவருக்கு காளைகளை அடக்குவதில் எல்லையில்லா ஆர்வம் இருந்துள்ளது. இவருடைய மாடுபிடி ஆர்வத்தை ஊக்குவித்து போட்டிகளில் பெற்றிடும் வெற்றிகள் அனைத்திற்கும் அழகத்தேவனின் உயிர்நண்பனான சமயன் என்பவர் திகழ்ந்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றிடும் பல்வேறு வகையான காளைகளின் குணாதிசயங்களை ஆய்வு செய்து அதனை மடக்கிப் பிடிக்கும் கலையினை வளர்த்துக் கொண்ட அழகத்தேவனும், அவரது நண்பர் சமயனும் சிறந்த மாடுபிடி வீரர்களாக அக்காலத்தில் உருவாகியிருந்தனர். இது எவரிடமும் பிடிபடாத மாடு என்று உரிமையாளர்களால் சவால் விடப்படும் மாடுகளை தன்னுடைய தனித்திறமையால் மடக்கிப் பிடிப்பது அழகத்தேவனின் தனிச்சிறப்பாகும்.
ரசிகர் பட்டாளம்
இன்றைய அலங்காநல்லூரை போன்று அன்றைய காலகட்டத்தில் ஜல்லிக்கட்டிற்கு பெயர் போன ஊராக விக்கிரமங்கலம் திகழ்ந்துள்ளது. இந்நிலையில் விக்கிரமங்கலம் ஜல்லிக்கட்டில் நின்று விளையாண்ட பல்வேறு காளைகளை மின்னல் வேகத்தில் அழகத்தேவன் மடக்கிப் பிடித்து தொடர் வெற்றிகளை குவித்து வந்துள்ளார். இதனால் அழகத்தேவனின் வீரமும் காளைகளை அடக்கிடும் திறமையும் மாமதுரையைச் சுற்றிலும் பரவியுள்ளது. அழகத்தேவன் பங்கேற்றிடும் ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியையும் காண்பதற்காக அக்காலத்திலே ஒரு ரசிகர் பட்டாளமே அவருக்கு இருந்துள்ளது. இதனை கண்டு பொறாமை கொண்ட அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மூத்த மாடுபிடி வீரர்கள் ஒன்று சேர்ந்து அழகத்தேவனை நீண்காலமாக கண்காணித்து அவரது யுக்திகளை கணித்துள்ளனர்.
பெண் பரிசு
இதையடுத்து அழகாத்தேவனை வீழ்த்துவதற்காக அடங்காத காளையொன்றை அந்த கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் தயார் செய்தனர். அந்த காளைக்கு அழகத்தேவனின் தனித்துவத்திற்கு எதிரான பாய்ச்சலை சொல்லிக் கொடுத்து பக்குவப்படுத் தியிருந்தனர். மேலும் தங்களது மாட்டை அடக்குபவருக்கு தங்களது கிராமத்தின் மூத்தகுடியின் பெண்ணை திருமணம் செய்து தருவதாக அறிவிப்பு செய்துள்ளனர்.
குடல் சரிந்தது
இந்த சூழ்ச்சியை அறியாத மாடுபிடி வீரரான அழகத்தேவனும் அவரது உயிர்நண்பனுமான சமயனும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டனர். அப்போது மூத்த மாடுபிடி வீரர்களால் தயார் செய்யப்பட்ட முரட்டுக்காளை மட்டும் அழகத்தேவனிடம் சிக்கிடாமல் போக்குகாட்டி விளையாடியுள்ளது. ஒருகட்டத்தில் விடாமுயற்சியுடன் வீறுகொண்டு எழுந்த அழகத்தேவனை அந்த காளை வயிற்றில் குத்தி குடலை சரியச் செய்துள்ளது. இருப்பினும் குடல் சரிந்து ரத்தம் வெள்ளமாக சிதறிய நிலையிலும் தனது இறுதிகட்ட சூட்சுமத்தை பயன்படுத்திய அழகத்தேவன் அடங்காத காளையை அடக்கி மண்ணில் சாய்த்து விட்டு தானும் மண்ணில் சாய்ந்துள்ளார். இதனை கண்ட அவரது நண்பர் சமயன் தான் உடுத்தியிருந்த துணியை கிழித்து அழகத்தேவனின் வயிற்றில் கட்டி அவரை தனது தோழில் தூக்கிப் போட்டுக் கொண்டு சொரிக்காம்பட்டி கிராமத்திலுள்ள நந்தவனம் எனும் தோட்டத்திற்கு ஓட்டமாக ஓடிவந்து சேர்த்துள்ளார்.
கொல்ல முடிவு
தனது மகன் அழகத்தேவன் ஜல்லிக்கட்டில் காயமடைந்த தகவலறிந்த அவரது தந்தை கருத்தமாயன் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் நந்தவனம் தோட்டத்திற்கு திரண்டு வந்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் தொடர் சிகிச்சை மேற்கொண்டதன் பலனாக அழகத்தேவன் உடல்நலம் பெற்றிட ஆரம்பித்துள்ளார். இதனையறிந்த பக்கத்து கிராமத்து மூத்த மாடுபிடி வீரர்கள் அழகத்தேவன் மீண்டு வந்தால் தங்களது மூத்தகுடியின் பெண்ணை திருமணம் முடிக்க கேட்டுவிடுவான் என்று பயந்து அழகத்தேவனை சதியின் மூலம் கொன்று விடமுடிவு செய்தனர்.
உயிர் நீத்த வீரர்
இதற்காக அழகத்தேவன் வைத்தியம் செய்து வந்த இடத்திற்கு தங்களது ஆட்களை ஆள்மாற்றி அனுப்பினார்கள். ஆள்மாறாட்டம் செய்து நந்தவனம் சென்றவர்கள் அழகத்தேவனுக்கு குடல் சரிந்த இடத்தில் கள்ளிக் கொழுந்தினை வைத்து மருந்து கட்டியுள்ளனர். இதனால் கள்ளியின் விஷம் சிறிது சிறிதாக அழகத்தேவனின் உடலில் கலந்து உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகிறது. அப்போது அடங்காத காளை களையெல்லாம் தனது மதிநுட்பத்தால் மடக்கிப் பிடித்த மாவீரன் அழகத்தேவன் தனது கடைசி ஆசையாக தனக்கு சொரிக்காம்பட்டி நந்தவனத்தில் கோவில் கட்ட வேண்டும், அதன் மூலமாக ஜல்லிக்கட்டு பற்றிய விழிப்புணர்வு வரும் சந்ததியினருக்கு தெரிய வந்திடும் என்று தனது கிராமத்தினரிடம் கூறிவிட்டு உயிர் துறந்துள்ளார்.
தோழனுக்கும் சிலை
இதையடுத்து மாடுபிடி மாவீரன் அழகத்தேவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிடும் வகையில் அவரது வாரிசுகளும்,கிராமத்தினரும் ஒன்றிணைந்து சொரிக்காம்பட்டி கிராமத்தில் அழகிய கோவிலை எழுப்பி இன்றும் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் காளையை அழகத்தேவன் அடக்குவது போன்ற சிலை வைக்கப்பட்டு அதனை அப்பகுதி மக்கள் வணங்கி செல்கின்றனர்.மேலும் நட்பின் இலக்கணமாக அழகத்தேவனுடன் இருந்த சமயனுக்கும் அங்கே சிலை வைக்கப்பட்டள்ளது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜல்லிக்கட்டில் அவர்களது வீரத்தையும் விவேகத்தையும் போற்றிடும் வகையில் இருவரும் இன்றுவரை அப்பகுதி மக்களின் நெஞ்சங்களில் நீங்காமல் உள்ளனர்.அதே போல் குடல்சரிந்த அழகத்தேவனை தனது தோளில் சமயன் தூக்கிச் சென்ற போது அவர்கள் தாகசாந்தி செய்திட இளைப்பாறிய இடங்களில் கற்கள் போடப்பட்டு மக்கள் வழிபாடு நடத்திச் செல்கின்றனர்.வீரம் விளைந்த மாமதுரை மண்ணில் அடங்காத முரட்டுக்காளைகளை அடக்கி சாதனை படைத்து சதியினால் உயிர்நீத்த மாடுபிடி வீரர்களின் முதல்வனான அழகத்தேவனின் கோவிலில் வழிபட்டு சென்றால் ஜல்லிக்கட்டில் போட்டிகளில் வெற்றி உறுதி என்பதால் சொரிக்காம்பட்டி கிராமத்திற்கு வந்து அழகத்தேவன் கோவிலில் வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
வீரர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, அழகத்தேவன் போன்ற மாவீரர்களின் தியாகத்தினால் இன்றுவரை அழியாமல் உள்ளது என்பதே நிஜம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.