முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை மலைப்பாதையில் காட்டு யானை தாக்கி சென்னை பக்தர் பலி

திங்கட்கிழமை, 8 ஜனவரி 2018      ஆன்மிகம்
Image Unavailable

பம்பை, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில், காட்டு யானை தாக்கியதில், சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி வழிபாடு நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த 14 பேர் கொண்ட குழுவினர் கூட்டாக ஐயப்பன் கோயிலுக்கு மலைப்பாதை வழியாக சென்று கொண்டு இருந்தனர். கரிமலை ஏற்றத்தில் நேற்று காலை அவர்கள் ஏறினர். அப்போது நிதேஷ் குமார் (வயது 30) என்ற இளைஞர் இயற்கை உபாதை ஏற்பட்டதை அடுத்து வனப்பகுதியில் ஒதுங்கியுள்ளார்.

அப்போது, அங்கு வந்த காட்டு யானை ஒன்று, நிதேஷ் குமாரை கடுமையாகத் தாக்கியது. பின்னர் அந்த யானை காட்டுக்குள் சென்றது. உடனடியாக அவரது நண்பர்கள் விரைந்து வந்து நிதேஷ் குமாரை மீட்டு அடிவாரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் ஏற்கெனவே நிதேஷ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து