முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசு வழங்கும் விழா முன்னாள் நகர்மன்ற தலைவர் ஒ.ராஜா வழங்கினார்

திங்கட்கிழமை, 8 ஜனவரி 2018      தேனி
Image Unavailable

தேனி - தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து நேற்று பெரியகுளம் கூட்டுறவு பண்டகசாலைக்கு உட்பட்ட நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பெரியகுளம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஒ.ராஜா அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் என்.வி.ராதா, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் (பொறுப்பு) நாராயணன், இயக்குநர்கள் அன்பு, சுந்தர்ராஜ், விசக்குட்டி சேகர், பிரேமாராஜேந்திரன், தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சந்தோசம், டி.கள்ளிப்பட்டி மாங்காய்முத்து உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கூட்டுறவு பண்டகசாலை பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து