முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,வாழ்த்தி பரிசுகளை வழங்கினார்.

கலெக்டர் பாராட்டு

டிசம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற 36வது தமிழ்நாடு மாநில அளவிலான கராத்தே போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் செல்வன்.வி.தீபன்ராஜ் தங்கப்பதக்கத்தையும், செல்வி.வி.யுவஸ்ஸ்ரீ வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.  மேலும், ஜனவரி 31ம் தேதி நடைபெற உள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்குகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.  வெற்றிபெற்ற மாணவ மாணவியர்கள் தங்கப்பதக்கத்தையும், வெண்கல பதக்கத்தையும் கலெக்டர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வின்போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து