முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவல்லிக்கேணியில்தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      சென்னை

சென்னை, திருவல்லிக்கேணி, பல்லவன் சாலை, எஸ்.எம்.நகர், காந்தி நகர் என்ற முகவரியில் வசித்து வரும் செண்பகம், பெ/.32, என்பவருக்கும் பக்கத்து வீடுகளில் வசிக்கும் நபர்களுக்கும் இடையே குடிதண்ணீர் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்படுவ உண்டு. இந்நிலையில் மேற்படி செண்பகம் என்பவருக்கும் பக்கத்தில் வசிக்கும் சக்திவேல், ஜெயகுமார், ஜெய்குமார் மற்றும் சதானந்தம் ஆகியோருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சிறையில் அடைப்பு

 பின்னர் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்ட நிலையில், சக்திவேல், ஜெயகுமார், ஜெய்குமார் மற்றும் சதானந்தம் ஆகியோர் சேர்ந்து செண்பகத்தை கை மற்றும் கல்லால் தாக்கி, விரட்டிச் சென்றுள்ளனர். செண்பகம் அவரது வீட்டிற்குள் சென்ற பிறகும் இவர்கள் வீடு வரை துரத்திச் சென்று தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த செண்பகத்தை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், செண்பகம் இது குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டதில், புகார்தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்ததன்பேரில், தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 1.சக்திவேல், 2.ஜெயகுமார், 3.ஜெய்குமார், ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள சதானந்தன் என்பவரை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து