முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஸ் ஊழியர்கள் பேச்சுவார்த்தையின் போது போராட்டத்தை தூண்டியதே தி.மு.க. தொழிற்சங்கங்கள்தான் - சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : போக்குவரத்து ஊழியர் பேச்சுவார்த்தையின் போதே வாட்ஸ் ஆப் மூலம் போராட்டத்திற்கு தூண்டியது தி.மு.க தொழிற்சங்கம் தான் என்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

போக்குவரத்து ஊழியர் போராட்டம் தொடர்பாக சட்டசபையில் கடும் வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் எதிர்க்கட்சித். துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து இந்த பிரச்னையில் இவ்வளவு நேரம் வாக்குவாதம் தேவையில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. அதை நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குற்றச்சாட்டு

இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,

வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் தலையிட்டு பேச்சு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் கூறியிருக்கிறார். எந்த ஒரு பிரச்னையானாலும் முதலமைச்சருடன் கலந்து பேசித் தான் முடிவு எடுக்கப்பட்டதாக போக்குவரத்துறை அமைச்சரும் கூறினார். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே ‘வாட்ஸ் ஆப்’பில் பேச்சுவார்த்தை தோல்வி என பீதியை கிளப்பும் வகையில் தி.மு.க. தொழிற்சங்கங்கள் செய்தி வெளியிட்டு போராட்டத்தை தூண்டினர் என்றார். துணை முதல்வரின் இந்த குற்றச்சாட்டை அடுத்து, இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து