முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆறுமுகசாமி கமிஷனில் தாக்கல் செய்துள்ளது.

தமிழக  மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு ஆறுமுகசாமி கமிஷன் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பியது.

இதத்தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை அப்பல்லோ நிர்வாகம் ஆறுமுகசாமி கமிஷனில் தாக்கல் செய்துள்ளது. 2 பெட்டிகளில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் சுவாமிநாதன் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதாவிற்கு இதயம் செயலிழந்த போது அவருக்கு சிகிச்சை அளித்தவர் மருத்துவர் சுவாமிநாதன் ஆவர்.

சென்னை எழிலகத்தில் உள்ள ஆறுமுகசாமி அலுவலகத்தில் ஆஜராகியுள்ள அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து