எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: மக்கள் பயன்பெறும் வகையில் 521 புதிய திட்டங்கள் அறிவித்தும், 3,200 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 2,329 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புள்ளிவிவரத்துடன் நேற்று சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு கவர்னர் 8-ம் தேதி அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கான முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் பதில் அளித்து கூறியதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டில் எப்பொழுதும் ஆர்வம் காட்டிவரும் அம்மாவின் அரசு, பழங்குடியினர்களின் கல்வி மேம்பாட்டிற்கென திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் செங்காட்டுப்பட்டி மாணாக்கர்களுக்கு விடுதியும், பச்சமலை மற்றும் தென்புற நாட்டில் இரண்டு சமுதாயக் கூடங்களும், ஜவ்வாது மலையில் இரண்டு உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகள் மற்றும் ஆசிரியர் குடியிருப்புகள் 30.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் அறிஞர்கள் மற்றும் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு சிறப்பு செய்தவர்களை அம்மாவின் அரசு பெருமைப்படுத்தி வருகிறது.
அதன்படி, அறிவியல் தமிழறிஞர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் பெயரில் புதியதாக ஒரு விருது தோற்றுவிக்கப்பட்டதுடன், திண்டுக்கல் மாவட்டத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோருக்கு 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டு 31.12.2017 அன்று என்னால் துவக்கிவைக்கப்பட்டது.மேலும், திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ஒரு மணி மண்டபம் கட்டப்படும் என தூத்துக்குடி மாவட்டத்தில் 22.11.2017 அன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது நான் அறிவித்திருந்தேன். இது தவிர, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 2.80 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு நினைவு மண்டபம் அமைத்து 1.10.2017 அன்று திறந்து வைக்கப்பட்டது. சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய கலைவாணர் அரங்கம் 62.73 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு...
இவ்வாறு தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த பலருக்கு பல்வேறு விருதுகளை வழங்கியும், மணி மண்டபம் மற்றும் நினைவு மண்டபங்களை கட்டி பெருமை சேர்த்த அம்மாவின் நினைவைப் போற்றும் வகையில் அம்மா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு நினைவு மண்டபம் அமைக்க அம்மாவின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அம்மா குடியிருந்த ‘வேதா நிலையத்தை’ அரசுடைமை ஆக்கி, அவர்தம் நினைவும், புகழும், மேன்மையும், சிறப்பும், அடுத்து வரும் தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்காக ஒரு நினைவுச் சின்னமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நினைவு வளைவு...
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் ஒரு மாபெரும் நினைவு வளைவு அமைக்கப்படவுள்ளது என்பதை இம்மாமன்றத்திற்கு மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சுற்றுலாவுக்கு உகந்த இடமாக தமிழ்நாடு உள்ளது என்பதற்குச் சான்றாக கடந்த மூன்று ஆண்டுகளாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது.
30 மாவட்டங்களில்...
பக்தர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அம்மாவின் அரசு, கடந்த ஆண்டில் 30 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளது. 655 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு 1.11.2017 அன்று பழமை மாறாமல் திருப்பணி மேற்கொண்டதற்கு ‘‘யுனெஸ்கோ” நிறுவனம் விருது வழங்கியுள்ளது. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு 2.10.2017 அன்று தூய்மை இந்தியா விருது மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. 2.5.2017 அன்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படியும், 2017 டிசம்பர் வரை 30 மாவட்டங்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
521 புதிய திட்டங்கள்
அந்தந்த மாவட்டங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் 521 புதிய திட்டங்கள் அறிவித்தும், 3,200 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 2,329 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன.
அரசு ஆணை ...
இவ்வாறு பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை இந்த அரசு மேற்கொண்டு வருவதுடன், சட்டப் பேரவை விதி 110ன் கீழும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதன் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பு 2017-18-ம் நிதி ஆண்டில் சட்டமன்றத்தில் சட்டமன்ற விதி 110-ன் கீழ் நான் 102 அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறேன். அவற்றில் 76 அறிவிப்புகளுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு, 8 அறிவிப்புகளுக்கான பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டும். 68 பணிகள் நடைபெற்றும் வருகின்றன. 23 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 3 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.