முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாக். அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 7 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 7 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.

தொடர் மீறல்...

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் மெந்தார் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. எல்லையில் அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும்.

7 பேர் பலி...

நேற்றும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மோட்டார் மற்றும் தானியங்கி ஆயுதங்களை கொண்டு இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தானின் அடாவடி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்தது. இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 7 பாகிஸ்தானிய வீரர்கள் உயிரிழந்தனர் என தெரியவந்து உள்ளது. பாகிஸ்தான் தரப்பில் 4 வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர் எனவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், எல்லையில் இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தொடர்ந்து சண்டை நீடித்தது.

பதிலடி...

கடந்த ஞாயிறன்று காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் பலியானதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து