முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பத்தில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலை தூர கல்வி மையம் திறப்பு விழா

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      தேனி
Image Unavailable

  கம்பம்,- தேனி மாவட்டம் கம்பத்தில் மதுரை காமரா ஜர் தொலை  தூர கல்வி மையம் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வி.ப.ஜெயபிரதீப் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கம்பம்&&தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எதிர் புறம் புதிதாக அமைக்கப் பட்டுள்ளது மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலை  தூர கல்வி மையம்.இந்த மையத்தை முன்னாள் எம்.பி.சையதுகான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வி.ப.ஜெயபீரதிப் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து இந்நிறுவனம் மென் மேலும் வளர வாழ்த்து தெரிவித்தார்.இந்நிகழச்சியில் தேனி மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளரும் தேனி தொகுதி பாரளுமன்ற உறுப்பினருமான ஆர்.பார்த்திபன்,கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் முன்னாள் அண்ணா திமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் கம்பம் நகர் மன்றத் தலைவருமான டி.டி.சிவக்குமார் தேனி மாவட்ட வழக்கறிஞர் செயலாளர் கிருஷ்ணகுமார்,தொழிலதிபர் கே.எம்.சி.முத்து கோவிந்தன் மற்றும் கம்பம் நகர பிரமுகர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் ஏ.எஸ்.ஆர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஏ.எஸ்.ஆர் பாலசந்தர் கனிவுடன் உபசரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து