எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் பயணத்திற்கான மானிய ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். மேலும், தினகரன் மற்றும் நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் புதுக்கட்சி தொடங்குவதால் அ.தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்புமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிவாரண உதவி
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து எம்.ஜிஆரின் உருவச்சிலை அக்கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது, எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலையணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தினார். எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி இருவரும் இனிப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கினர்.
பிரதமருக்கு அழைப்பு
இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும். இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் தேதி கொடுத்ததும் விழா நடைபெறும். இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களைமீட்க நடவடிக்கை எடுக்கும் படி பிரதமருக்கும் வலியுறுத்தியுள்ளோம்.
மறுபரிசீலனை...
ஹஜ்பயணத்தின் மானியம் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக ஊடகத்தின் வாயிலாக அறிந்தோம். இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். தமிழகத்தில் இருந்து வெளிமாநிலம் சென்று படிக்கும் மாணவர்கள் தங்களின் பாதுகாப்பை முன்னிட்டு, தமிழக அரசிடம் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு செய்யாத நிலையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. இருப்பினும் வெளிமாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அ.தி.மு.க. தயார்...
ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ., தினகரன் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவரிடம்தான் கேட்கவேண்டும். மேலும் அவர் புதுக்கட்சி தொடங்குவதால் அ.தி.மு.கவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 10 ஆண்டுகள் அவர் கட்சியிலே இல்லை. அவர் எங்கு போனார் என்று கூட தெரியாது. அப்போது கட்சி ஏதாவது பாதிப்பை சந்தித்ததா? ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மட்டுமே அவரை பெரிது படுத்துகின்றீர்களே தவிர, மக்கள் யாரும் அவரை நினைக்கவே இல்லை.
உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க எப்போதும் தயாராக உள்ளது. மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளது உட்கட்சி பிரச்சனை, குடும்ப பிரச்சனையை யாராவது வெளியே சொல்வார்களா? அதை பற்றி பொதுவெளியில் விவாதிக்கவிரும்பவில்லை. மதுசூதனனுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. அவரும் திருப்தியடைந்து விட்டார்.
பிரதமரை சந்திப்பேன்...
இந்தியாவின் நிதி அறிக்கை தாக்கல் செய்வதக்கு முன்னாள் மத்திய அமைச்சரால் கூட்டம் கூட்டப்படும். அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் (ஓ.பன்னீர்செல்வம்) புதுடெல்லி செல்கிறேன். தேவைப்பட்டால் பிரதமரை சந்திப்பேன். பிரதமரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் காவிரி பிரச்னை குறித்து கோரிக்கை வைப்பேன். காவிரி மேலாண்மை வாரியம் குறித்தும், காவிரிநீர் பங்கீடு குறித்தும் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. பாசனத்திற்கு தண்ணீர் தேவை என மத்திய அரசிற்கும், பிரதமருக்கும், கர்நாடக முதல்வருக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் ஒரு பயனும் இல்லை.
பங்கிட்டு தர...
நீதிமன்றத்தில் இடைக்கால வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றத்தில் தீர்ப்புவரஇருக்கிற காரணத்தினாலே இந்த மனுவை ஏற்கமுடியாது என்று நிராகரித்துவிட்டார்கள். இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அதற்கான பதில் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக அரசை பொருத்தவரையில் இருக்கிற தண்ணீரை சமமாக பங்கிட்டு விவசாயிகளுக்கு தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சியில் உள்ள நிர்வாகிகள் முழுமையாக நீக்கப்பட்ட பிறகு புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வரும்.
பாதிப்பு இல்லை...
நடிகர் கமல்ஹாசன் தனிக் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட பிறகு அதுபற்றி கருத்து சொல்கிறேன். தனிக்கட்சியானாலும், கூட்டாக கட்சி ஆரம்பித்தாலும் அ.தி.மு.கவுக்கு யாராலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. பட்டாசு தொழிலாளர்கள் குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நீதிமன்றத்திலும் இது குறித்துவழக்கு தொடரப்பட்டு மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க உள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நேற்று காலை 11 மணி முதல் 12 மணிவரை சுமார் ஒரு மணிநேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சென்னையில் சிறப்பாக நடத்துவது குறித்தும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவையொட்டி வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி என்னென்ன நலத்திட்ட உதவிகள் மேற்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை துணைசபாநாயகருமான தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, ஜெயகுமார். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, வீரமணி, சரோஜா, சீ.வளர்மதி, ராஜலட்சுமி, எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஸ்கரன், கடம்பூர் ராஜூ, மணிகண்டன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, துரைக்கண்ணு, ராமகிருஷ்ணரெட்டி, உடுமலை ராதாகிருஷ்ணன், பாடநூல் வாரியத்தலைவர் பா.வளர்மதி, எம்.ஜிஆர். இளைஞர் அணி செயலாளர் அலெக்சாண்டர், மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த், வழக்கறிஞர் அணி செயலாளர் நவநீதக்கிருஷ்ணன் எம்.பி., மாவட்ட செயலாளர்கள், வி.என்.ரவி, பாலகங்கா, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், மாவட்ட பேரவை செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ், முன்னாள் பேரவை மாவட்ட செயலாளர் ஆர்,எம்,.டி.ரவீந்திரஜெயன், முன்னாள் கவுன்சிலர் டி.சிவராஜ், ஆயிரம்விளக்கு ஜெயலலிதா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ