முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மண்ணில் மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் என்றும் ஞிங்காமல் வாழும் முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மணிக்கூண்டில் இருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் மாவட்ட செயலாளர் மருதராஜ் இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் பி.கே.டி.நடராஜன், ஆவின் தலைவர் திவான்பாட்சா, அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, பேரவை செயலாளர் வி.டி.ராஜன், வழக்கறிஞர் அணி செயலாளர் ஜெயபாலன், வழக்கறிஞர்கள் பழனிசாமி, மனோகரன், வார்டு செயலாளர்கள் ராஜ்மோகன், வீரமார்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து