முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி பகுதிகளில் ரூ.44.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையாளர் ஆய்வு

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.44.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,   ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 வார்டு எண்.3 குலமங்கலம் மெயின் ரோடு மங்களவிநாயகர் தெருவில் ரூ.9.90 லட்சம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணியினையும், ஆனையூர் பேருந்து நிலையம் அருகில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடற்ற ஏழைகள் தங்கும் இல்ல கட்டிடத்தையும், வார்டு எண்.23 விளாங்குடி கணபதி நகரில் ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணியினையும் என மொத்தம் ரூ.44.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக மண்டலம் எண்.2 புதூர் மண்மலை மேடு, தேசிய விநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அங்கு செல்லும்  கோசாகுளம் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மண்மலை மேட்டில் உள்ள கண்மாயினை தூர்வாருமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். உடனடியாக கண்மாயினை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், வீடுகளிலிருந்து கழிவுநீரினை நேரடியாக கண்மாய் மற்றும் கால்வாயில் விடும் வீடுகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் குப்பைகளை கால்வாய்களில் கொட்டாமல் கண்காணிக்குமாறும், விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் மண்மலை மேடு குடியிருப்போர் நலச்சங்கத்திடம் கூறினார். மண்மலை மேடு பகுதியில் சாலை அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் டுரிப் திட்டத்தின் கீழ் சாலைப் பணியினை மேற்கொள்ளுமாறு கூறினார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்கள்  அரசு,  பழனிச்சாமி, உதவி நகர்நல அலுவலர்  பார்த்திபன், செயற்பொறியாளர்  ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், உதவி செயற்பொறியாளர்கள்  முருகேசபாண்டியன்,  அலெக்ஸ்சாண்டர், உதவிப் பொறியாளர்கள்  மணியன்,  பாபு, சுகாதார அலுவலர்கள்  விஜயகுமார்,   சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள்  கோபால்,  செல்வகுமார்,  ராஜாமணி குமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து