எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சேலத்தில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்றும், கோவை மாவட்டம் சூலூர் விமானநிலையத்தில் ராணுவத்திற்கான பராமரிப்பு பழுது பார்ப்பு மையத்தை அமைக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று ராணுவ தொழில் வளர்ச்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
வரவேற்கத்தக்கது
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. உள்நாட்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்புத்துறை முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆட்டோ மொபைல்ஸ், ஜவுளி, தோல், எலக்ட்ரானிக், ஹார்ட்வேர், அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கும் வலுவான தொழில்துறை சூழ்நிலை காரணமாகவும், உயர் தேர்ச்சி, மனித வளம் பெருமளவில் கிடைப்பதன் காரணமாகவும் இது சாத்தியமாகி இருக்கிறது. இதன் காரணமாக உலகதரத்தை நாம் சந்திக்க முடிந்துள்ளது.
120 நிறுவனங்கள் ...
தமிழ்நாட்டில் 70 என்ஜினியரிங் கல்லூரிகளில் வானூர்தி குறித்த தொழில்நுட்ப பாட வகுப்புகளை நடத்தி வருகிறோம். இதில் ஆண்டுதோறும் 5 ஆயிரம் வானூர்தி தொழில்நுட்ப என்ஜினியர்கள் பட்டம் பெற்று வெளிவருகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள வானூர்தி தொழில்நுட்ப நிறுவனங்களில் நம்முடைய தொழில்நுட்பக் கலைஞர்களும், என்ஜினியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்கு திட்டம் 2023-ஐ அறிமுகப்படுத்தினார். இதில் வானூர்தி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வானூர்தி தொழில்நுட்பத்துக்குத் தேவையான உதிரி பாகங்களை தயாரிப்பதில் 120 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
வேலைவாய்ப்பு...
பல்வேறு ராணுவ நிறுவனங்களுக்கும், அரசுத்துறை நிறுவனங்களுக்குமென 700-க்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்கள் இருந்து வருகிறார்கள். ஆட்டோ மொபைல் உற்பத்தித் திறனில் தமிழ்நாடு வலுவாக உள்ளது. இந்நிலையில் அடுத்த இலக்கு நமக்கு இருப்பது வானூர்தி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறைதான். இந்தியாவில் வானூர்தி தொழில்நுட்பத்துக்கு தேவைப்படும் உபகரணங்களில் 30 சதவீத அளவை வழங்கும் வகையில் தமிழகம் தன்னை தயாரபடுத்திக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் உள்ளது. இத்தகைய நடவடிக்கையில் ஒன்று தான் ஸ்ரீபெரும்புதூரில் உருவாகும் சென்னை வானூர்தி பூங்கா. முதல் கட்டமாக இந்தப் பூங்கா 250 ஏக்கரில் உருவாகி வருகிறது.
தயாராக இருக்கிறோம்
அடுத்தக் கட்டம் 500 ஏக்கர் அளவுக்கு விரிவுப்படுத்தப்படும். இந்தப் பூங்காவில் 50 வானூர்தி மற்றும் ராணுவத்துறை நிறுவனங்கள் இடம்பெறும். இவை ஒரிஜினல் உபகரணங்கள் தயாரிக்கும் மத்திய அரசின் ராணுவத் துறை கொள்முதல் கொள்கைக்கு வலுவான அடித்தளம் அமைக்கும். அதே சமயத்தில் விமானங்கள் பராமரிப்பு, பழுது பார்ப்பு, ஓவர்ஹால் மையம் சம்பந்தப்பட்ட பகுதியும் மிகவும் முக்கியமானதாகும். ஆகவே சென்னையில் இந்த வானூர்தி பராமரிப்பு, பழுது பார்ப்பு, ஓவர் ஹால் மைய வளாகத்தை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் தங்களது யூனிட்டை, கடைகளை ஏற்படுத்த பராமரிப்பு, பழுதுபார்ப்பு ,ஓவர் ஹாலிங் ஆபரேட்டர்கள் முன் வந்தாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பரிசீலிக்க வேண்டும்
உத்தேசித்துள்ள மிகவும் மேம்பட்ட கணினி முறை கணக்கீடு, வடிவமைப்பு என்ஜினியரிங் மையத்தை ரூ.180 கோடி செலவில் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இது 5 லட்சம் சதுர அடியில் உருவாகி வருகிறது. சென்னை வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறை பூங்காவில் பன்னாட்டுக்கு உற்பத்தி வளாகத்தை நாங்கள் அமைத்து வருகிறோம். இத்தகைய பின்னணியில் தமிழ்நாட்டில் பொருத்தமான ஒரு இடத்தில் ஹால் நிறுவனத்தால் அமைக்கப்படும் ஹெலிகாப்டர் தொழிற்சாலை மற்றும் எளிய ரக போர் விமானங்களை அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சேலத்தில் இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலையை அமைக்கலாம் என்று பரிந்துரை செய்கிறேன்.
முதலீடு செய்ய...
இதேபோல கோவை சூலூர் விமானப்படை நிலையத்தில் ராணுவத்துக்கான பராமரிப்பு பழுது பார்ப்பு ஓவர் ஹால் மையத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் நடுத்தர சிறு தொழில் நிறுவனங்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இதில் முதலீடு செய்பவர்களுக்கு தேவைப்படும் நிலம் மற்றும் கட்டமைப்புகள் இதர வசதிகள் மின்சார வினியோகம் ஆகியவற்றை ஒற்றை சாளர முறையில் வழங்க தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் உதவிடும். மாநிலத்தில் சுலபமாக தொழில் துவங்க ஒரு கூட்டத்தையும் தமிழ்நாடு அரசு சமீபத்தில் இயற்றியுள்ளது. இதேபோல ஒரு கூட்டத்தை கோவை நகரிலும் நடத்தலாம். உங்கள் அனைவரையும் அன்போடும் மகிழ்ச்சியோடும் வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் முதலீட்டுக்கு வாருங்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து உதவிகள், ஆதரவை அளிக்க நான் உறுதி கூறுகிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,