முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை இல்லை பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்க தலைவர் ஹபீஸ் சயீது. இவரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. சர்வதேச அழுத்தம் காரணமாக சயீது வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சயீதை வீட்டுக் காவலில் இருந்து விடுவித்தது. இதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மீண்டும் சயீதை கைது செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாசி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஹபீஸ் சயீத் சாஹிப்  மீது பாகிஸ்தானில் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. இந்தியாவுடன் எங்களால் போர் மூள வாய்ப்பு இல்லை” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து