முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைக் குழுவினர் பயணத்தை ரத்து செய்தது ஏன்? வடகொரியாவிடம் விளக்கம் கோரும் தென் கொரியா

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

சியோல்: குளிர்கால ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு தங்கள் நாட்டுக்கு வரவிருந்த கலைக்குழுவினரின் பயணத்தை வடகொரியா ரத்து செய்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தென் கொரியா கோரியுள்ளது.

இதுகுறித்து தென்கொரியா தரப்பில், வடகொரியாவின் குழுவினர் வருகையையும், அவர்களது செயல்பாடுகளையும் வரவேற்க நாங்கள் தயராக இருக்கிறோம். அப்போதுதான் தென்கொரியா, வடகொரியா இணைந்து போட்டிக்கான அட்டவணையை வழி நடத்த முடியும். ஆனால் வடகொரியா, கலைக் குழுவினரின் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளது. இந்த ரத்து குறித்து வடகொரியா விளக்கமளிக்க வேண்டும்” என்று கோரியுள்ளது.

தென்கொரியா, வடகொரியா இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க வடகொரிய அதிபர் விருப்பம் தெரிவித்தார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு தங்கள் நாட்டுக்கு வரவிருந்த கலைக்குழுவினரின் பயணத்தை வடகொரியா ரத்து செய்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தென் கொரியா கோரியுள்ளது.
தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தங்கள் நாட்டு வீரர்களை உற்சாகமூட்ட 230 நபர்களை கொண்ட ஊக்கமளிக்கும் குழுவை வடகொரியா அனுப்ப திட்டமிட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து