எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிலி: சிலி நாட்டில், 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்தபோது, போப் ஆண்டவர் ஆசியுடன் ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. போப் ஆண்டவர் பயணித்த விமானத்தில் திருமணம் நடப்பது இதுதான் முதல்முறையாகும்.
சுற்றுப்பயணம்
தென் அமெரிக்க கண்டத்தில் சிலி நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் சான்டியாகோ நகரில் இருந்து வடபகுதியில் இருக்கும் ஐகியூகியூ நகருக்கு லதாம் விமான நிறுவனத்தின் ஏர்பஸ் 321 என்ற விமானத்தில் நேற்று பயணித்தார்.
இந்த விமானத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், விமானத்தின் தலைவர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் பயணம் செய்தனர். விமானம் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது, அதில் பணியாற்றும் ஊழியர்கள் இருவர் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி போப் ஆண்டவர் பிரான்சிஸிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
திருமணம்
மணமகன் கார்லோஸ் சியுபார்டி(வயது 41), மணமகள் வுலா போடெஸ்ட்(வயது 39) ஆகியோரின் வேண்டுகோளை ஏற்ற போப் ஆண்டவர் அவர்களுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்தார்.
இந்த திருமணம் குறித்து மணமகன் கார்லோஸ் சியுபார்டி நிருபர்களிடம் கூறுகையில், '' நாங்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதியே திருமணம் செய்துவிட்டோம். அப்போது, சிலி நாட்டில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால், தேவாலயம் சிதலமடைந்தது. ஆதலால், அங்கு திருமணம் நடத்த இயலாத சூழல் ஏற்பட்டது. கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடக்கவில்லை. ஆதலால், இப்போது உங்கள் முன் திருமணம் செய்ய விரும்புகிறோம் என போப் ஆண்டவரிடம் தெரிவித்தோம்.
சம்மதம்
அதற்கு அவர், 'நான் செய்து வைக்கிறேன்' என்றார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா என்று போப் எங்களிடம் கேட்டார். 'ஆம்' எனத் தெரிவித்தோம். எங்கள் இருவருக்கும் மிகச் சுருக்கமாக திருமண சடங்குகளை போப் ஆண்டவர் பிரான்சிஸ் செய்து வைத்தார். லதாம் ஏர்லைன்ஸ் விமானத்தின் தலைவர் இக்னேஷியோ கியூடோ எங்கள் திருமணத்தின் சாட்சியாக இருந்தார்.
அதன்பின் எங்களுக்கு, போப் ஆண்டவர் பிரான்சிஸ் கையொப்பம் இட்ட, கையால் எழுதப்பட்ட திருமணச் சான்றிதழ் வழங்கப்பட்டது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் தலைமையில், விமானத்தில் நடந்த இந்த திருமணம் விலை மதிப்பில்லாதது.
எங்களின் திருமணம் உண்மையில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதற்கு முன் போப் ஆண்டவர் பிரான்சிஸ் விமானத்தில் யாருக்கும் திருமணம் செய்து வைத்தது இல்லை.
எங்களுக்கு முறைப்படி திருமணம் இப்போதுதான் நடந்துள்ளது என்கிற போதிலும், தற்போது 6 வயதிலும், 3 வயதிலும் இரு குழந்தைகள் உள்ளனர். விரைவில் 'மினி ஹனி மூன்' செல்ல திட்டமிட்டுள்ளோம்'' கார்லோஸ் சியுபார்டி தெரிவித்தார்.
இந்த திருமணம் குறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் கிரேக் புருக் கூறுகையில், ''இங்கு நடந்த திருமணம் செல்லுபடியாகும். அனைத்தும் அதிகாரப்பூர்வமானது. திருமணச் சான்றிதழும், புகைப்படமும் அனுப்பி வைக்கப்படும்'' என்றார்.
போப் ஆண்டவர் சொன்ன அறிவுரை
புதுமணத் தம்பதியினருக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் சிறிய அறிவுரையும் கூறியுள்ளார். அதில் ''திருமணத்தன்று கையில் அணிவிக்கப்படும் மோதிரம் மிகவும் இறுக்கமாக இருக்கக் கூடாது. ஏனென்றால் அது உங்களுக்கு எரிச்சலைஉண்டாக்கும். அதேசமயம், விரலைக் காட்டிலும் மோதிரம் சிறிது பெரிதாக இருந்தால், எளிதாக விரலில் இருந்து கழன்றுவிடும். ஆதலால், கவனமாக இருக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.