முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டாளின் புகழ்பாட நினைத்து இகழ் பாடியதுதான் தவறு சொல்கிறார் தமிழிசை

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஆண்டாளின் புகழ்பாட நினைத்து இகழ் பாடியதுதான் என மக்கள் கூறுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

ஆண்டாள் குறித்து எழுந்த சர்ச்சை பற்றி கவிஞர் வைரமுத்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில் தான் கூறிய கருத்து திரித்து வெளியிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார். மேலும் ஆண்டாளின் புகழ்பாட நினைத்தது தவறா என்றும் வைரமுத்து கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆண்டாளின் புகழ்பாட நினைத்தது தவறா? எனக்கேட்கிறார் கவிஞர் வைரமுத்து. ஆண்டாளின் புகழ்பாட நினைத்து இகழ் பாடியதுதான் தவறு என்கின்றனர் மக்கள்.
- தமிழிசை

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ஆண்டாளின் புகழ்பாட நினைத்தது தவறா? எனக்கேட்கிறார் கவிஞர் வைரமுத்து என்ற தமிழிசை, ஆண்டாளின் புகழ்பாட நினைத்து இகழ் பாடியதுதான் தவறு என்கின்றனர் மக்கள் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து