முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி உரிமம் கோரும் நீதிபதி

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

ராஞ்சி, கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை விதித்த சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் தனக்கும் தனது குடும்பத்துக்கும் துப்பாக்கி உரிமம் கோரியுள்ளார்.

லல்லு உள்ளிட்டோர் மீதான கால்நடை தீவன ஊழல் வழக்குகளில், தியோகர் மாவட்ட கருவூலத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் லல்லு உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என சி.பி.ஐ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 23-ம் தேதி அறிவித்தது. இதில் லல்லுவுக்கு கடந்த 6-ம் தேதி மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிவபால் சிங் தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில் நீதிபதி சிவபால் சிங், அவரது மகன், மகள் ஆகிய மூவரும் கைத்துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து