எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரூர் : நிதி நெருக்கடியை சமாளிக்கவே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும், இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது என்றும், மற்ற மாநிலங்களை காட்டிலும் இந்த கட்டண உயர்வு குறைவுதான் என்றும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பஸ் கட்டண உயர்வு குறித்து விளக்கமளித்துள்ளார்.
தமிழக அரசு நேற்று முன்தினம் பஸ் கட்டணங்களை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண மாற்றங்கள் நேற்று முதல் அமுலுக்கு வந்தன. பஸ் கட்டண உயர்வு ஏன் என்பது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.
தினமும் ரூ.10 கோடி...
தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த 7 ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மேலும் புதிய பேருந்துகளும் வாங்கப்படவில்லை. இதனால் தினமும் சுமார் ரூ.10 கோடி இழப்பை அரசு போக்குவரத்து கழகம் சந்தித்தன. பஸ்களுக்கான எரிபொருள் விலை அதிகரிப்பு, கூடுதல் பராமரிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களால் பஸ் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்ற நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. இருந்தாலும் மக்கள் நலன் கருதி கடந்த 7 வருடங்களாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. சமீபத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சில நாட்களாக அரசு உயரதிகாரிகள் பஸ் கட்டணம் உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் கட்டணத்தை உயர்த்தி நேற்று முன்தினம் இரவு தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த கட்டண உயர்வு நேற்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடும் நிதிநெருக்கடி...
இந்த நிலையில் கரூர் மாவட்டம் புஞ்சை புகழூரில் ரூ.75 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்த கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பேரூந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது. போக்குவரத்துத்துறைக்கு கடுமையான நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்கவே இந்த கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கு முன்பு ஒரு நாளைக்கு ரூ.9 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வுக்கு பின்பு ரூ.12 கோடி நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிதி சுமையிலும் கடந்த 2011-ம் ஆண்டு பிறகு அதாவது 7 ஆண்டுகள் கழித்து பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வு, ஊதிய உயர்வு, வாகனங்களின் உதிரி பாகங்கள் விலை உயர்வு என ரூ.4657 கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 60,000 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.2500 கோடியை முழுமையாக வழங்கியுள்ளோம்.
தமிழகத்தில் குறைவு...
இதுவரை இல்லாத அளவிற்கு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் பேருந்து கட்டணம் குறைவாக வசூலிக்கப்பட்டுகிறது. ஆந்திராவில் கி.மீட்டருக்கு 63.70 காசும், கேரளாவில் 64 காசும் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் பலமுறை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 16 முறையும், ஆந்திராவில் 8 முறையில் கேரளாவில் 8 முறையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.900 கோடி பற்றாகுறை
தமிழக மக்களின் நலன் கருதி தமிழகத்தில் மிக குறைந்த கட்டணத்தில் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புற பகுதிகளில் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்யும் நிலையிலும் சேவை அடிப்படையில் அதிக அளவில் பேருந்துள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு ரூபாய் வரவு என்றால் ஒரு ரூபாய் 45 பைசா செலவு உள்ளது. இதனை சரிசெய்யவே இந்த ஆண்டு கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. கட்டண உயர்வுக்கு பின்பு ஆண்டிற்கு ரூ.900 கோடி பற்றாகுறை ஏற்படும். இந்த கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் அதிக கட்டணம் வசூலிப்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் பொறுத்துக்கொள்ள...
வரும் காலங்களில் போக்குவரத்துத்துறை நவீனமயமாக்கப்படும். விரைவில் 2000 பேருந்துகள் இயக்கப்படும். நவீன வசதிகளுடன் பேருந்துகள் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிக்கு வர உள்ளது. எனவே இந்த பேருந்து கட்டண உயர்வை தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசிற்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டுமென்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
வரவு குறைவு - செலவு அதிகம்
தமிழக போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கு முன்பு ஒரு நாளைக்கு ரூ.9 கோடி இழப்பு ஏற்பட்டது. ஊதிய உயர்வுக்கு பின்பு தற்போது ரூ.12 கோடி நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு ரூபாய் வரவு என்றால் ஒரு ரூபாய் 45 பைசா செலவு உள்ளது. கட்டண உயர்வுக்கு பின்பு ஆண்டிற்கு ரூ.900 கோடி அரசுக்கு பற்றாகுறை ஏற்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.