எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் : மறைந்த முதல்வர் அம்மாவின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் உயர பாடுபட்டு வருகின்றனர் என்று திண்டுக்கல்லில் நடந்த கல்லூரி விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
திண்டுக்கல் நொச்சியோடைப்பட்டி அனுகிரஹா அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மையை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த தேசிய அளவிலான பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் ஐசக் வரவேற்றார். துணை முதல்வர் சூசைமாணிக்கம், சேர்மன் அருமைநாதன், கல்லூரி செயலாளர் லாரன்ஸ், பேராசிரியர் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெங்களூர் நிமன்ஸ் நிறுவனமும், அனுகிரஹா அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய இம்முகாமில் பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மாணவ, மாணவிகளை வாழ்த்தி பாராட்டி வருவாய்த்துறை அமைச்சரும், பேரிடர் மேலாண்மை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றுகையில், பேரிடர் ஏற்படும் போது அதனை எதிர்கொள்வது எப்படி என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். முன்பெல்லாம் எப்போதாவது தான் சுனாமி, நிலச்சரிவு போன்ற பேரிடர் ஏற்படும். ஆனால் சமீபகாலமாக இவை அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழையின் போது 48 சதவீதம் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை மூலமாக 32 சதவீதம் மழை பெய்யும். இதன்மூலம் பெறக்கூடிய தண்ணீரை வைத்துத்தான் குடிஞிர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரியான மழைப்பொழிவு கிடைக்காவிட்டால் வறட்சி ஏற்படும்.
சில நேரங்களில் பேரிடர் நிகழ்வு ஏற்படுகிறது. அதனைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் தாழ்வான பாதிக்கப்பட்ட பகுதி. பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ள பகுதி உள்ளிட்ட 5 வகையாக அடையாளம் கண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வானிலை அறிக்கை கிடைத்தவுடன் மக்களுக்கு தேவையான நிவாரணமும் பாதுகாப்பு முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு உணவு, உடை ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடரின் போது மக்களின் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிசெய்யப்பட வேண்டும்.
அம்மாவின் ஆட்சியில் சுனாமி பேரலை ஏற்பட்ட போது அவரது துரித நடவடிக்கையால் மீட்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு மக்கள் இயல்புநிலைக்கு திரும்பினர். இவ்வாறு செய்த நடவடிக்கையை மற்ற மாவட்டங்களுக்கும், பிற நாடுகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டுமென உத்தரவிட்டார். அதன்படி பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடலோர 13 மாவட்டங்களில் அடிக்கடி பேரிடர் ஏற்படுகின்ற காரணத்தால் முதல்நிலை காவலர்களாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியை நன்கு அறிந்தவர்களே இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், மாணவர்கள் மட்டுமின்றி மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அரசு பயிற்சி அளித்து வருகிறது.
வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டால் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அம்மாவின் ஆட்சியில் தான் முதன் முதலாக வறட்சிக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்வித்துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்தார். மாணவர்களுக்கு தேவையான 16 கல்வி உபகரணங்களை அம்மா வழங்கினார்.
தொலைநோக்கு திட்டத்தோடு மாணவர்களின் நலன் கருதி அம்மா திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். தனிநபர் வருமானம் உயர வேண்டும் என்பதற்காகவும் அம்மா திட்டங்களை அறிவித்தார். அம்மாவின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாணவர் சமுதாயம் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும் என்பதற்காக பாடுபட்டு வருகின்றனர் என்று பேசினார்.
அதன்பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் லாப நோக்கோடு செயல்படுத்தப்படுவதில்லை. மக்களின் சேவைக்காகவே போக்குவரத்து கழகங்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக கிராம மக்கள் தங்குதடையின்றி செல்வதற்கு சாலை வசதி, புதிய பேருந்து வசதி, புதிய வழித்தடங்கள் உருவாக்குதல் போன்றவை உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக அண்டை மாநிலங்களில் போக்குவரத்து கட்டணம் பலமுறை மாற்றி உயர்த்தியுள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள டீசல் விலையேற்றத்தின் காரணமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து கழகம் நலிந்து விடக்கூடாது. அதனைக் காப்பாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு சிறந்ததொரு சேவை அளிக்க வேண்டும் என்பதாலேயே முதல்வரும், துணை முதல்வரும் பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து கட்டண உயர்வை அறிவித்துள்ளனர் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.