முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: அரியானா அரசு முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

சண்டிகர் :  அரியானா மாநிலத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அரியானா மாநிலத்திலும் சிறுமிகள் பலாத்காரச் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. இதுகுறித்து காங்கிரஸ் கேள்வியெழுப்பியிருந்தது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டா, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை இயற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

மேலும் கடந்த ஆண்டு பதிவான பாலியல் புகார் வழக்குகளில் 25 சதவீதம் பொய்யானவை என்றும், 75 சதவீத கற்பழிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள், பக்கத்து வீட்டினர், ஏற்கனவே பழக்கமானவர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து