முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பனில் கடல் உள்வாங்கியதால் நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தவிப்பு.

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,-: பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் தென் கடல் திடீரென உள்வாங்கியதால் அப்பகுதியிலுள்ள நாட்டுபடகு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்க செல்முடியாமல் தவித்தனர்.
 ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியிலுள்ள சின்னப்பாலம்  கடலோரப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட சிறிய நாட்டு படகில் மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் தினசரி அதிகாலையில் மீன்பிடிக்க சென்று மாலையில் மீன்களை பிடித்துகொண்டு கரை திரும்பி வருவார்கள்,.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அப்பகுதியில் தென்கடல் திடீரென கரையிலிருந்து 2 கி.மீ தொலை தூரத்திற்கு உள்வாங்கியது.இதனால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரைதட்டி நின்றது.மேலும் இந்த படகுகளை மீனவர்களால் மீட்கமுடியாமல் தவித்தனர். இதனால் அப்பகுதியிலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து