முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் இயக்க பவள விழா

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

மதுரை,- மதுரை தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் இயக்க பவளவிழா நடைபெற்றது.
மதுரை தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் இயக்கத்தின் 75 ஆம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பவள விழா மலரினை பள்ளியின் அதிபர் அருள்திரு. பெ.ஆரோக்கியசாமி பெற்றுக்கொண்டார். மேலும் இயக்கத்தின் வரலாற்றுப்பதிவு ஏட்டினை சென்னை மண்டல இயேசு சபை அதிபர் செபமாலை ராசா சே.ச வெளியிட இயேசு சபையின் ஆசிய பள்ளிக்கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் சன்னி ஜேக்கப், இந்தியாவில் உள்ள இயேசு சபை நிறுவனங்களின் முன்னாள் மாணவர் இயக்கத்தலைவர் தேவேந்திர சிங், தென்மாநிலங்களில் உள்ள இயேசு சபை நிறுவனங்களின் முன்னாள் மாணவர் இயக்கத் தலைவர் செந்தில் குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பள்ளியின் தாளார் செபாஸ்டின் ஆசியுரை வழங்கினார். தமிழக முன்னாள் மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கென்னடி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் நா.ஜெகதீசன் மற்றும் எஸ்.ரத்தினவேலு, அன்புக்கனி, சண்முகசுந்தரம், நடராஜ் சங்கரன், மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாணவர் இயக்கத்தின் இயக்குநர் வே.ஜார்ச் சே.ச ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜான் அலெக்ஸாண்டார் நன்றி கூறினார். இவ்விழாவின் நிகழ்வுகளை செயலர் சந்திரன் தொகுத்தளித்தார். பால்பாண்டி, ஜெயசீலன், பால்ராஜ், சுபாஷ்சந்திர போஸ், அசோகன், ரெஜிஸ் ஆகியோர் ஒருங்கிணைந்து வழிநடத்தினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து