முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது கடிதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கவே இல்லை - அண்ணா ஹசாரே குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : பிரதமர் மோடிக்கு 30க்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளேன். ஆனால் ஒரு பதில் கூட வரவில்லை. தான்  பிரதமர் என்ற எண்ணத்தில் இருப்பதால்தான் மோடி பதில் எழுதவில்லை என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது,

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு சமூக பிரச்னைகள் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளேன். ஆனால், ஒரு கடிதத்துக்கும் பதில் வரவில்லை. மோடிக்கு, தான் பிரதமர் என்ற எண்ணம் இருப்பதால்தான் அவர் எனது கடிதங்களுக்கு பதில் எழுதவில்லை என்று குற்றம்சாட்டினார். அதே போல, விவசாயிகளின் பிரச்னைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 23ம் தேதி புது டெல்லியில் மீண்டும் ஒரு போராட்டத்தைத் தொடங்க உள்ளேன். அரசுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். லோக்பாலை நிறைவேற்றுவது, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி புது டெல்லியில் அண்ணா ஹசாரே போராட்டத்தைத் தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து