முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கிற்கு எதிராக தாக்குதல் நடத்த இந்தியா தயங்காது - ராஜ்நாத் சிங் சூசக தகவல்

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ : பாகிஸ்தானுக்கு எதிராக மேலும் துல்லியத் தாக்குதல் நடத்த இந்தியா தயங்காது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சூசகமாக தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற பா.ஜ.க ரயில்வே தொழிற்சங்க கூட்டத்தில் அவர் பேசியதாவது,

சில மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் கோழைத்தனமான முறையில் தாக்குதல் நடத்தி, நமது வீரர்கள் 17 பேரைக் கொன்றது. இதுகுறித்து எங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் கொன்றது. இதன்மூலம், எதிரிகள் மீது நமது மண்ணில் மட்டுமல்லாமல், அவர்களது நாட்டுக்குள் சென்றும் தாக்குதல் நடத்த முடியும் என்ற உறுதியான செய்தியை உலகிற்கு இந்தியா தனது துல்லியத் தாக்குதல் மூலம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுடன் நட்புறவுடன் இருப்பதையே இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இந்தியா ஒருபோதும் பிற நாடுகளிடம் மண்டியிடாது 

--- ராஜ்நாத்சிங்

உலக அளவில் இந்தியா சக்திவாய்ந்த நாடு என்ற தோற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியா தனது சக்தியை மேலும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுடன் நட்புறவுடன் இருப்பதையே இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இந்தியா ஒருபோதும் பிற நாடுகளிடம் மண்டியிடாது என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார் ராஜ்நாத் சிங்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து