முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம்

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவனேசன் ஒரு வழக்கு விசாரணைக்காக ஏ.டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்ற போது அவரை தரக்குறைவாக நடத்தியதாகவும், ஒருமையில் பேசி திட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அப்போது பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர் சிவனேசனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்கள் தெரிவிக்கையில் ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் சவடமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். போலீசார் அவர்கள் அளித்த மனுவினை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து