முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா மாநில பெண் கலெக்டர் காதல் திருமணம்: டெல்லி ஐ.பி.எஸ். அதிகாரியை மணந்தார்

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கலெக்டர் ஆம்ரபாலிக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஆம்ரபாலி (25). இவர் சென்னை ஐ.ஐ.டியில் கட்டிட பொறியியல் படித்தார். அதன்பிறகு கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தெலங்கானா மாநிலத்தில் புதிதாக உருவான வாரங்கல் மாவட்டத்தின் முதல் கலெக்டராக நியமிக்கப்பட்டார். மாவட்டத்தில் இவரது சிறந்த பணிகளை பாராட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பல பரிசுகளை வழங்கி உள்ளார்.

இந்நிலையில், ஆம்ரபாலியும், டெல்லியைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி சமீர் ஷர்மாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீர் ஷர்மா இப்போது யூனியன் பிரதேசமான டையூ-டாமன் பகுதியில் எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் ஒப்புக்கொண்டதால், பிப்ரவரி 18-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் திருமணம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 23-ம் தேதி வாரங்கலில் விருந்து நடத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து