முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்து துறையை சீரமைக்கவே கட்டண உயர்வு - அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : போக்குவரத்துத் துறையை சீரமைக்கவே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் 122-வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயகுமார், பாண்டியராஜன், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் தமிழக கவர்னர் புரோகித் ஆய்வுகளை மேற்கொள்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியில் மக்களுக்கு எந்த குறையும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சீராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புதிய பேருந்துகளை வாங்கவும், போக்குவரத்துத்துறையை சீர்படுத்தவே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் சிறைக்கு செல்லும் காலம் வந்து விட்டது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து