முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் விலகல்

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஜோ ரூட் விலகியுள்ளார்.

தொடரை கைப்பற்றியது...

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததையொட்டி தற்போது இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. வரும் 26-ந்தேதி அடிலெய்டில் 4-வது போட்டியும், 28-ந்தேதி பெர்த்தில் 5-வது போட்டியும் நடக்கிறது.

முத்தரப்பு தொடர் ...

அதன்பின் 7-ம் தேதி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் பிப்ரவரி 18-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன ஜோ ரூட் விலகியுள்ளார். ஆனால் பிப்ரவரி 25-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.

இடைவேளிதான்...

இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘எல்லா போட்டிகளிலும் விளையாடுவதற்காகவே நான் இங்கு வந்தேன். இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதை நான் மிகவும் நேசிக்கிறேன். கிரிக்கெட் ஆட்டத்தை தவற விடுவதை நான் விரும்பவில்லை. நான் விலகுவது குறித்து பயிற்சியாளரிடம் பேசினேன். இந்த சீசனில் இன்னும் ஏராளமான போட்டிகள் உள்ளன. இது ஒரு சிறிய இடைவேளிதான்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து