முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயுள் முடிந்த செயற்கைக் கோளில் இருந்து மீண்டும் கிடைத்த சிக்னல்: அமெரிக்க விஞ்ஞானிகள் வியப்பு

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள தி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைட் பிஸிக்ஸ் ஆய்வகத்துக்கு கடந்த 20-ம் தேதி ஒரு தகவல் விண்வெளியிலிருந்து கிடைத்தது. அந்த சிக்னலானது நாசா அனுப்பிய 166-வது செயற்கைக்கோளிலிருந்து கிடைத்தது என்று ஆய்வகம் தெரிவித்துள்ளது. இது அங்குள்ள விஞ்ஞானிகளுக்கு பெரும் ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஆயுள் முடிந்தது என்று அறிவிக்கப்பட்ட செயற்கைக்கோளிலிருந்து அந்த சிக்னல் வந்துள்ளது.

அந்த செயற்கைக்கோளிலிருந்து அடிப்படை விஷயங்கள் தொடர்பான தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. செயற்கைக்கோளின் பிரதான கட்டுப்பாட்டு கருவி மட்டும் செயல்பட்டு வருகிறது என்று நாசா விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது.

மேற்கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டதில் தகவல் வந்த அந்த செயற்கைக்கோளானது 2000-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி நாசா விண்வெளி நிலையத்தால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. பூமியைச் சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் பூமிக்கு அவ்வப்போது தகவல்களை அனுப்பி வந்தது. கடந்த 2005-ம் ஆண்டு அந்த செயற்கைக்கோளைத் தொடர்புகொள்ள முயன்றபோது நாசாவால் முடியவில்லை. இதையடுத்து 2007-ம் ஆண்டு அந்த செயற்கைக்கோளின் பணி முடிந்துவிட்டதாக நாசா அறிவித்துவிட்டது. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து