முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25 ஆயிரம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் வசதி ரயில்வே துறைக்கு சிறப்பு திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மத்திய பொது பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான சிறப்பு திட்டங்களை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.

அதில், ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 4000க்கும் மேற்பட்ட ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். 25 ஆயிரம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் வசதி அமைக்கப்படும். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும்.

ரயில் தண்டவாளங்கள் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தண்டவாளங்களுக்கு பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும். அனைத்து ரயில் நிலையங்களிலும் வைபை வசதி ஏற்படுத்தப்படும். பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும். 3600 கிலோ மீட்டத் தொலைவுக்கு ரயில் பாதைகள் சீரமைக்கப்படும். நாடு முழுவதும் 600 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

2019ம் ஆண்டுக்குள் 4000 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். நாட்டில் உள்ள 4 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்படும். ரூ.40 ஆயிரம் கோடி செலவில் புறநகர் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். 18 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து