முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கி ராணுவம் வான்வழித் தாக்குதல்: ஈராக்கில் குர்து வீரர்கள் 41 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

கெய்ரோ: ஈராக்கின் வடக்கு பகுதியில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குர்து படையைச் சேர்ந்த 41 வீரர்கள் பலியாகினர்.

இதுகுறித்து துருக்கி ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ''ஈராக்கின் வடக்குப் பகுதியில் சாப், அவசின் மற்றும் ஹக்குர்க் மாகாணத்தில் இரண்டு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் குர்து படையைச் சேர்ந்த 41 வீரர்கள் கொல்லப்பட்டனர்'' என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக குர்து படையினர் 1980 முதல் துருக்கியுடன் சண்டையிட்டு வருகின்றனர். துருக்கியில் அவ்வப்போது குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் குர்து படையினருக்கு எதிராக துருக்கி தொடர்ந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.

குர்து படையை துருக்கி தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. குர்து மற்றும் துருக்கி இடையே நடக்கும் சண்டையில் இதுவரை 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து