முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட் தாக்கம் எதிரொலி: 2-வது நாளாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

மும்பை: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக, மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை 840 புள்ளிகள் குறைந்தது.

திடீர் வீழ்ச்சி
பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வியாழனன்று காலை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது நீண்ட கால முதலீடு திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். நிதி அமைச்சர் அறிவிப்புக்கு பிறகு, மும்பை பங்குச்சந்தை இறக்கத்தை சந்தித்தது. காலையில் உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தை மாலையில் சரிவை சந்தித்தது.

கடும் சரிவு
இந்நிலையில், நேற்று காலை முதலே மும்பை பங்குச்சந்தை சரிய தொடங்கியது. காலையில் சுமார் 600 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. அதன்பின்னர் மாலையில் முடியும்போது 840 புள்ளிகள் சரிந்து 35,066 புள்ளிகளில் முடிவடைந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் 190 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. அது மாலை வரை தொடர்ந்தது. இதனால் வர்த்தகம் முடியும்போது, 256 புள்ளிகள் குறைந்து 10,760 புள்ளிகளில் முடிவடைந்தது. வங்கி துறை பங்குகள் சுமார் 3.80 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. மேலும், ஒ.என்.ஜி.சி., டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, ஹீரோ மோடோகாப், கோல் இண்டியா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து