முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட இந்தியா ஆதரவளிக்கும்: சுஷ்மா

சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

காத்மண்டு, நேபாளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட இந்தியா ஆதரவளிக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

இரண்டு நாள் பயணமாக நேபாளத்துக்கு சென்ற அவர்  நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.என்) மூத்த தலைவர் பிரசண்டாவை சந்தித்துப் பேசினார். பின்னர், இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்.

அதைத் தொடர்ந்து பிரசண்டா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தலுக்குப் பிறகு நிலவிவரும் அரசியல் சூழல் குறித்தும், புதிய அரசு பொறுப்பேற்பதற்காக எடுக்கப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்தும் விவாதித்தோம். இங்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட அண்டை நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று சுஷ்மாவிடம் கோரினோம். நேபாளத்தின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும், வளர்ச்சிக்கும் இந்தியா முழு ஆதரவளிக்கும் என்று அவர் உறுதியளித்தார். தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி கட்சி வெற்றி பெற்றதற்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார் என்றார் பிரசண்டா.

முன்னதாக, நேபாளத்தின் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று கருதப்படும் சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான கே.பி.சர்மா ஒலியை சுஷ்மா சந்தித்து பேசினார். மேலும் நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரி, பிரதமர் ஷேர் பகதூர் தேபா ஆகியோரையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார். இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு தலைவர்களுடன் சுஷ்மா ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து