எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருக்கிறது என்றும், அதற்கான கதவு திறந்தே உள்ளது என்றும், வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறுங்கள் என மின்சார வாரிய சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினருக்கு மின்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில், மின் துறை அமைச்சர் தங்கமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மின்மிகை மாநிலம்...
2010, 2011-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்கின்ற பொழுது, தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு இருந்தது. அதற்கு காரணம், கடந்த கால ஆட்சியில் புதிய மின் திட்டங்களும், நிறுவு திறனை ஏற்படுத்தாததும், பராமரிப்பு பணி சரியாக இல்லாததும் ஒரு காரணம் என்பதை ஜெயலலிதா தெளிவாக எடுத்துரைத்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்கிக் காட்டுவேன் என்று தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா சொன்னார். அதே போல, இன்றைய தினம் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருக்கின்ற அளவிற்கு தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்ற நிலைமையை ஜெயலலிதா உருவாக்கித் தந்திருக்கின்றார்.
பல்வேறு சலுகைகள்...
அவர் வழியில் செயல்படும் முதல்வர் எடப்பாடி.பழனிசாமி தலைமையிலான அரசும் இன்றைய தினம் தமிழக மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காக, மின்சார வாரியத்திற்கு முன்னுரிமை அடிப்படையில், பல்வேறு சலுகைகளை வழங்கி வந்து கொண்டிருக்கிறது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் 100 யூனிட் மின்சாரம் என்பது அனைத்து வீடுகளுக்கும் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
பேச்சுவார்த்தையில்...
இந்த நிலையில், மின்சார வாரிய தொழிலாளர்களோடு பலகட்ட பேச்சுவார்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டு தினங்களுக்கு முன்பாக, சி.ஐ.டி.யூ சங்கங்களைத் தவிர, அனைத்து சங்கங்களும் இங்கே வந்து வேலைப்பளுவினுடைய ஒப்பந்தம் இன்னும் ஏற்படாத காரணத்தினால், அதை பேசி முடிப்பதற்கு சிறிது காலம் ஆகும் என்ற காரணத்தினால், தொழிலாளர்களுக்கு இப்பொழுது இடைக்கால நிவாரணம் வழங்கலாம் என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இரண்டு சங்கங்கள்...
இதற்கு தி.மு.க உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் ஒப்புக்கொண்டு அதற்காக 2017 அக்டோபரிலிருந்து 2018 ஜனவரி வரை மாதம் 2500 ரூபாய் வீதமாக 4 மாதங்களுக்கும் ஒரே முறையாக 10,000 ரூபாய் கொடுப்பதாக நாங்கள் கூறினோம். அவர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல ஓய்வு பெற்றவர்களுக்கு 1,500 ரூபாய் வீதம், அவர்களுக்கும் 4 மாதங்களுக்கு, 5,000 ரூபாய் வழங்குவதற்கும் அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கிடையில், சி.ஐ.டி.யூ உள்ளிட்ட இரண்டு சங்கங்கள், 16-ம் தேதியிலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போகிறோம் என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்கள்.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்ற பொழுதே, நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று சொல்வது, அரசிற்கு எந்தவிதத்திலாவது கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு உள்நோக்கத்தோடுதான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படமால் இருந்து, அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால்கூட பரவாயில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அன்றையதினம் வந்த சங்கங்கள் அனைத்தும் வேலைப்பளுவினுடைய, ஒப்பந்தம் முடிந்ததற்குப் பின்னால்தான் இதைப் பேசமுடியும் என்பதற்காக சிறிது காலம் ஆகும் என்று சொன்னோம்.
மக்கள் வரிப்பணத்தில்....
நானாக இருந்தாலும் சரி, மின்சார வாரிய ஊழியர்களாக இருந்தாலும் சரி, மக்களுடைய வரிப்பணத்தில் தான் நாம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றோம். மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான் அரசும் இருக்கின்றது. ஊழியர்களும் இருக்கின்றார்கள். மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துவதற்காக அரசும் இல்லை, ஊழியர்களும் இல்லை. அந்த சி.ஐ.டி.யூ சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எங்களுடைய கதவு திறந்தே இருக்கின்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமுகமாக , பேசி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றார். அந்த வகையிலே நாங்கள் திறந்த மனதோடு இருக்கின்றோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்.
வாபஸ் பெற வேண்டும்...
வேலைநிறுத்தம் என்பது மக்களுக்கு பல்வேறு வகையில் இடைஞ்சலை ஏற்படுத்துவது என்பது தான் அவர்களுடைய நோக்கமாக இருந்தால், மக்கள் அதை புரிந்து கொள்ளவேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்ற பொழுது, அந்த சி.ஐ.டி.யூ மட்டும் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். 12-ம் தேதி ஒருகட்ட பேச்சுவார்த்தை இருக்கின்றது. பேச்சுவார்த்தை முடியவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமாக முடித்துக் கொள்வதற்கு அரசு தயாராயிருக்கின்றது. ஆகையால், போட்டி மனப்பான்மையில்லாமல், மின்வாரியமும், தொழிலாளர்களும் எப்பொழுதும் போல ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்காக பேச்சுவார்த்தையின் வாயிலாக இதனை பேசி முடித்துக் கொள்ளலாம். அதனால் வேலைநிறுத்த அறிவிப்பை அவர்கள் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
பறவைக் காய்ச்சல், அம்மை நோய் பாதிப்புகள்: அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு
23 Apr 2024சென்னை, கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.