முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழக நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி, தலைமையில்  நடைபெற்றது.

குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர்அவர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். இக்கூட்டத்தில், கலெக்டர் சந்தீப் நந்தூரி,  முன்னாள் படை வீரர் நலத்துறையின் மூலம் படைப்பணியின் போது இறந்த படைவீரர் ழயஎ.ளு. பிரபாகரன் அவர்களது மனைவி சி.பெனிடிக்டா முத்துமணி என்பவருக்கு இராணுவ மைய நல நிதியிலிருந்து ரூ.1,70,000/-த்திற்கான காசோலையினையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், சிவகிரி வட்டத்தைச் சார்ந்த இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை மற்றும் குடிநீர், சாலை வசதிகள் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டு, பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் எஸ். சங்கரலிங்கம், திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் என்.முருகன், துணை ஆட்சியர்கள் (பயிற்சி) மயில், செல்வி.லெட்சுமி பிரியா உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து