முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      திருவண்ணாமலை

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல் வேலைவாய்ப்பு கடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டாஇ முதியோர் உதவித் தொகை காவல்துறை பாதுகாப்பு மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 241 மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

உத்தரவு

இம்மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் வேலை வேண்டி கலெக்டர் அவர்களிடம் விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி குமரவேல் என்பவருக்கு தோட்டக்கலைத்துறை, துணை இயக்குநர் அலுவலகத்தில் தற்காலிக தகவலியல் பதிவாளர் பணிநியமன ஆணையினையும், வருவாய்த் துறையின் சார்பில் 4 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும், தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரன நிதியிலிருந்து 4 நபர்களுக்கு ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளையும் கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.

மேலும் மதுரையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 14 வது மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பங்குபெற்று முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்ற வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலெக்டர் சி.அ.ராமன், அவர்களிடம் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கஜேந்திரன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் துறை) பேபிஇந்திரா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெ.ஜெயக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பொன்னு மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து