முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் நடப்பதைக் கண்டு இனியும் அமைதியாக இருக்கக் போவதில்லை: ஐக்கிய நாடுகள் சபை தகவல்

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ், சிரியாவில் நடப்பதைக் கண்டு இனியும் நாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை என்று ஐ.நா. கூறியுள்ளது.

அறிக்கை...

இதுகுறித்து ஐ. நா., தரப்பில், ''சிரியாவில் நிலைமை தற்போது முன்பு இருந்ததைவிட மோசமாகியுள்ளது. சிரியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட முக்கிய மூன்று இடங்களில் உதவிகள் தடுக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிக மோசமானவையாக பதிவாகியுள்ளன. கடந்த 8 வருடங்களில் இம்மாதிரியான மோசமான தாக்குதலை சிரியாவில் நாங்கள் பார்க்கவில்லை. சிரியாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் உள் நாட்டுப் போரில் பசி கொடுமை, வான்வழித் தாக்குதல் ஆகியவற்றில் இதுவரை 5,00,000 மக்கள் பலியாகியுள்ளனர். இனியும் நாங்கள் சிரியாவில் நடப்பதைக் கண்டு இனி அமைதியாக இருக்கப் போவதில்லை''என்று தெரிவிக்கப்பட்டது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யா அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து